பக்கம்:சோழநாட்டுத் திருப்பதிகள் 1.pdf/177

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

நாகை அழகியார் 159 கின்றேன்’ என்றது உபாய அத்தியாவசாயத்தில் ஊற்றத்தாலே பதறுதல் தவிர்ந்தேன்’ என்று கூறுவதாகக் கொள்ளல் வேண்டும்! மேலும் தொடர்ந்து பேசுகின்றாள் தலைவி: ‘'இப் பெரியார் குடந்தைக் கிடந்த கோவலன் என்னலாம்படி விளங்கு வர்; அதுவும் தெளிவாகத் தெரியவில்லை. திருவாழி திருச் சங்குகள் திருக்கைகளில்ஏந்தியுள்ளார்; இளமகளிர் இளைஞர் களைச் சுற்றிக் கொண்டிருப்பர்களாகையாலே இவரும் இள மகளிர்களால் சுற்றி வணங்கப் பெற்றுள்ளார். அவர்தம் உள்ளம் குளிரும்படி முத்துமயமும் பொன்மயமுமான திருவாபரணங் களை அணிந்து கொண்டுள்ளார்; அம்மகளிரை உவந்து தழுவு வதற்கு நான்கு திருத்தோள்களையுடையவராகத் திகழ்கின்றார். இவருடைய அழகோ நம்மால் பேசிமுடியாது (2); இவருடைய திருக்கண்களின் அழகுதான் என்னே! தாமரைக் கண்ணன் என்னலாம்படி தோன்றுகின்றார். ஓங்கிப் பரந்த மலைகள் போலே திகழ்கின்றனவாய்த் தோள் வளைகள் முதலியவற்றின் புகர் விஞ்சி விளங்கப் பெற்றவையான ஆயிரம் திருத்தோள்களும் அவயவந்தோறும் திருவாபரணங்களும் பொலிந்து நிற்கும் அழகைத்தான் என் சொல்லுவேன்! அலங்காரமும் வேண்டாத வடிவு தானே அமையாதோ என்னலாம் படியான அழகு அமைந்திருப்பதுதான் என்னே! இவ்வழகை நோக்குங்கால் இவர் திருமெய்யத்தில் எழுந்தருளியிருப்பவர் போலவும் தாவி உலகையெல்லாம் அளந்தவர் போலவும் தோன்றுகின்றார் (3). ‘'தோழி, அவருடைய பரத்துவ செளலப்பியங்களைக் கூறுகின்றேன், கேளாய். மணங்கமழும் திருத்துழாய் மாலை களைத் தோளினைமேல் அணிந்துள்ளார்; திருக்கைகளில் திருவாழி திருச்சங்குகளைப் பூவேந்துமாப்போலே ஏந்தி யுள்ளார்; இப்படிப்பட்ட பரத்துவங் கொண்டிருந்தும், எட்டாத வராக இராமல் நாமிருக்குமிடத்திலேயே வந்து புகுந்துள்ளார்! பரமரசிகர். இளமை ததும்பும் பருவமுடையவராகத் திகழ் கின்றார். இவருடைய வாயிதழ்கள் திருப்பவளம் போலிரா நின்றன. திருவுருவமோ செம்பவளத் திரள் போலே விரும்பத் தகுந்ததாக இரா நின்றது. இங்ங்ணம் உவமையில்லாதவரை உவமையிட்டுச் சொல்லுவதும் சரியன்று என்னும்படி பேரழகு டையவர் (4); உறையூரையும் தென் மதுரையும் இருப்பிடமாகக் கொண்டு காட்சி தரும் கோபல கிருஷ்ணன் போன்றவர்! மலை போன்ற திண்ணிய நான்கு திருத்தோள்களை யுடையவராகக் காட்சி தருகின்றார். இவருடைய திருமேனியின் தோற்றம்