பக்கம்:சோழநாட்டுத் திருப்பதிகள் 1.pdf/18

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது
பதிப்புரை

சோழ நாட்டுத் திருப்பதிகள் முதல் பாகத்தில் இருபது திருப்பதிகளை ஆசிரியர் அவர்கள் நேரில் சென்று எம்பெருமானின் அவதாரப் பெருமையையும் மகிமையையும் நெஞ்சுருக அனுபவித்து எழுதியுள்ளார். 'யான் பெற்ற இன்பம் இவ்வையகம் பெறுக’ என்ற நோக்கோடு படிப்பவர் அனைவருக்கும் அந்தந்த திருப்பதிகளில் எழுந்தருளியிருக்கும் பெருமானை நேரில் சேவித்த பரவசத்தை ஏற்படுத்தும் வண்ணம் நூல் அமைந்துள்ளது. ஆழ்வார் பாசுரங்களில் உள்ளம் உருகி உருகி அனுபவித்து ஆனந்த பரவசம் அடைந்த ஆசிரியர் ஒவ்வொரு திருப்பதியின் பெருமாள் அவதாரப் பெருமையை கூறுவதோடு பக்தர்கள் தரிசிக்க ஏதுவாக வழித்தடங்களையும் சொல்லிக் கொண்டே செல்வது நாமும் அவருடன் சென்ற ஓர் உன்னத உணர்வை அடையச் செய்கிறது. ஆசிரியர் டாக்டர். ந. சுப்புரெட்டியார் அவர்களின் இந்நூலை வெளியிட எம்பெருமான் அருள்பாலித்துள்ளமையெண்ணி மகிழ்வுறுகிறோம்.

ஆர். தேவகி