இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது
ஸ்ரீமத் பரமஹம்ச சடகோப
ராமாநுஜ ஜீயர் சுவாமி
அவர்களின் திருவடிகளில்
பக்திப் படையல்
மோனமா தவத்தின் முடிமணி யான
- முகுந்தனின் கருணையில் உருகும்
ஞானமா தவர்கள் பதின்மருக் குளத்தை
- நற்பெருங் கோயிலாச் செய்து
தானமே முதலாம் குணங்களாம் பணியால்
- சால்வுடன் அலங்கரித் துவக்கும்
வானமா மலைநஞ் சீயர்தம் பாத
- மலரினிற் சிறக்கஇந் நூலே.