பக்கம்:சோழநாட்டுத் திருப்பதிகள் 1.pdf/53

இப்பக்கத்தில் நுட்ப மேம்பாடு தேவை

35

உறையூர் அழகிய மணவாளன் அருளியுள்ளார். யாழையே தெய்வமாகப் போற்றி வந்த பாணர் குலத்தில் தோன்றிய பாணர்விளக்கு திருவரங்கப் பெருமானை இசைப் பயனாகவும் காண்கின்றார். இவர்தம் பாசுரங்களின் பெருமையை, காண்பனவும் உரைப்பனவும் மற்றொன்(று) இன்றிக் கண்ணனையே கண்டுரைத்த கடிய காதல் பாண்பெருமாள் அருள்செய்த பாடல்பத்தும் பழமறையின் பொருளென்று A. EA a f3 PÒ 12 என்று போற்றிப் புகழ்வர் வேதாந்த தேசிகர். திருவரங்கத்து அமுதனாரும், சீரிய நான்மறைச் செம்பொருள் செந்தமி ழால் அளித்த பார்இய லும்புகழ்ப் பாண்பெரு மாள்.' என்று பாண்பெருமாளின் வாக்கு நான்மறையின் செம் பொருளைச் செந்தமிழால் வெளியிடுகின்றது என்று போற்றிப் புகழ்வர். இச்செய்திகளை எல்லாம் அறிந்த நிலையில் மனநிறைவு பெற்ற வண்ணம் நம் இருப்பிடத்திற்குத் திரும்புகின்றோம்.

12. தே. பி. -132.

13. இராமா நூற் - 11.