பக்கம்:சோழநாட்டுத் திருப்பதிகள் 1.pdf/55

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

 37

    கரம்பனூர் உத்தமன்  

கின்றோம். உயிர் உடம்பினுள் இருந்து அதனைத் தரிக்கச் செய்கின்றது. உயிரின்றேல் உடல் வீழ்ந்து விடுதல் கண்கூடு. மேலும், உயிர்தான் உடலை இயக்குகின்றது. உயிர் உடலுக்குத் தலைவனாக உள்ளது. அங்ஙனமே இறைவன் எல்லாப் பொருள்களுள்ளும் இருந்து அவற்றைத் தரிக்கச் செய்து அவற்றைத் தன் விருப்பம்போல் நடத்தி அவற்றிற்குத் தலைவனாக இருக்கின்றான். ஆயினும், உடம்பினுள் உயிர் இருப்பதற்கும், எல்லாப்பொருள்களினுள் இறைவன் இருப்ப தற்கும் வேறுபாடு உண்டு. உயிர் அணு அளவினதாய் உடம்பி னுள் ஓரிடத்திலிருந்து தன் ஞானத்தால் (தர்மபூதஞானம்) உடல் முழுவதும் வியாபித்து இவ்வுடலைப் பற்றிய நிகழ்ச்சிகளை உணர்த்துகின்றது. இறைவன் இங்ஙனமின்றி ஒவ்வொரு பொருளுள்ளும் முழுவதும் தன் சொரூபத்துடன் வியாபித் துள்ளான். அன்றியும் உடலினுள், உயிர் இருப்பதற்கும் உடல் உயிர் ஆகிய இரண்டினுள் இறைவன் இருப்பதற்கும் மற்றொரு வேறுபாடும் உண்டு. உயிர் உடலினுள் இருக்கும் போது அவ்வுடலுக்குரிய வளர்ச்சி தேய்வுகள் (விகாரங்கள்) உயிருக்கு உண்டாவதில்லை. ஆனால், அவ்வுடலைப்பற்றிய இன்பதுன்ப உணர்ச்சிகள், அறிவின் சுருக்கம்பெருக்கம் ஆகியவை உயிருக்கு உண்டு. உடலின்மீது தண்ணிய காற்று வீசுங்கால் இன்புறுதலும், தீ சுடுங்கால் துன்புறுதலும் உடலினுள் இருக்கும் உயிருக்கு நேரிடுகின்றன. இனி குழவிப் பருவத்தில் அதனுள் இருக்கும் உயிரின் அறிவு சுருங்கிய நிலையிலிருந்து பின்பு வளர்ச்சியுறுதலைக் காண்கின்றோம். மற்றும் மக்கள் உடம்பினுள் உள்ள உயிர் ஐம்பொறி அறிவும் உடையதாக உள்ளது. அவ்வுயிரே மரம், எறும்பு முதலிய உடலில் புகுந்தால் ஐம்பொறியறிவுமின்றிச் சில குறையவும் பெறுகின்றன. இனி உயிர் பரு உடலைப் பெறாத நிலையில் அறிவு சுருங்கி இருத் தலும், பரு உடலைப் பெற்ற நிலையில் அறிவு விரிந்திருத் தலும் உண்டு. இங்ஙனமாக உடலைப்பற்றி நிற்கும் உயிர் இவ்வுடலுக் கேற்ப இன்பதுன்ப உணர்ச்சிகளும், அறிவின் சுருக்கமும் பெருக் கமும் அடைதல் தெளிவாகும். ஆனால், உடல் உயிர் இவ்விரண் டினுள்ளும் கலந்து நிற்கும் இறைவனை இவ்வேறுபாடுகள் சிறிதும் அடைவதில்லை. இக்கருத்தினை ஆழ்வார், "புலனொடு புலன் அலன்'

2. திருவாய் - 1.1:3.