பக்கம்:சோழநாட்டுத் திருப்பதிகள் 1.pdf/58

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

40 சோழநாடடுத் திருப்பதிகள்

முதற்பகுதி வேண்டும் என்ற கருத்தால் அரும்பெரும் தவம் செய்தல், பெரு வேள்விகள் செய்தல், சிறந்த நதிகளில் நீராடல், விரிவாகச் சாத்திரங்களைப் பயில்தல் ஆகிய இவற்றால் யாதொரு பயனும் இல்லை. கரம்பனூரில் எழுந்தருளியிருக்கும் புருடோத்தமன் திருநாமத்தைப் பலதரம் கூறுவாயாக’’ என்று தம் நெஞ்சிற்கு உபதேசம் செய்கின்றார் அய்யங்கார். உத்தமர் கோயிலுக்கு நல்ல வருவாய் உண்டு. ஆவணி யிலும் சித்திரையிலும் திருவிழாக்கள் நடைபெறுகின்றன. இட வசதி, நீர் வசதி, போக்குவரவு வசதிகள், பிற வசதிகள் நன்கு இருப்பதால் சிக்கனமாகவும், பெருமையாகவும் திருமணங்கள் நடைபெறுவதற்குச் சிறந்த இடமாகத் திகழ்கின்றது உத்தமர் கோயில். இச்செய்திகளையெல்லாம் அறிந்த நிலையில் திருவெள் ளறை என்ற திருத்தலத்தை நோக்கிப் பயணமாகின்றோம்.

  • * ★