பக்கம்:சோழநாட்டுத் திருப்பதிகள் 1.pdf/76

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

58 சோழநாட்டுத் திருப்பதிகள் - முதற்பகுதி அடைவது உறுதி என்று நம்மாழ்வாரும் திருமங்கை யாழ்வரும் கூறுகின்றனர். 'கூடுவர் நீள் விசும்பே' என்று திருமங்கை மன்னனும் ஆள்வது சூழ்பொன் விசும்பே' என்று நம்மாழ்வாரும் தத்தம் பல சுருதிப் பாசுரங்களில் கூறுவதைச் சிந்திக்கின்றோம். கல்லணையிலிருந்து குறுக்கே ஆற்றைக் கடந்து இலால்குடி வந்து அங்கிருந்து பேருந்து மூலம் நாம் திருச்சியில் தங்கியிருக்கும் மாயவரம் விடுதியை அடைகின்றோம்.