பக்கம்:சோழநாட்டுத் திருப்பதிகள் 1.pdf/98

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

80 சோழநாட்டுத் திருப்பதிகள் - முதற்பகுதி தூவிசேர் அன்னம் மன்னும் சூழ்புனல் குடந்தை யானைப் பாவியேன் பாவியாது பாவியேன் ஆயினேன்.' (துவி - சிறகு; பாவியாது - சிந்தியாமல்) 'பழுதே பல பகலும் போயின’ என்று அங்கலாய்க் கின்றார். திருவுக்கும் திருவாகிய அழுந்தையில் மன்னிநிறை அஞ்சனக் குன்றம்தன்னைச் சேவிக்கும் போதும், இந்த நகர் எம்பெருமான் ஆழ்வார் மனக்கண்முன் காட்சி தருகின்றார். பேரானை குடந்தைப் பெருமானை இலங்கொளிசேர் வாரார் வளமுலையாள் மலர்மங்கை நாயகனை ஆரா இன்னமுதைத் தென்அழுந்தையில் மன்னிநின்ற காரார் கருமுகிலைக் கண்டு களித்தேனே." (இலங்கு - விளங்குகின்றது; மலர் மங்கை - இலக்குமி, ஆரா - தெவிட்டாத அழுந்தை - திருவழுந்துர் முகில் மேகம் (உருவகம்) என்று எக்களிப்புடன் பாடுவதைக் காணலாம். எம்பெருமான் ஆசாரியனாக நின்று அவரிடம் திருமந்திர உபதேசம் பெற்ற ஆழ்வார், தூவிசேர் அன்னம் துணையோடு புணரும் சூழ்புனல் குடந்தையே தொழுதுஎன் நாவினால் உய்ய நான்கண்டு கொண்டேன் நாராய னாஎன்னும் நாமம்." (துவி - சிறகு துணை - பெண் அன்னம்) என்று பாடுகின்றார்; 'ஆரா அமுதப் பெருமானைத் திருங் குடந்தையில் சேவித்தேன்; தீய பொருள்களைப் பேசின. வாயாலே திருமந்திரத்தை அநுசந்தித்து ஸ்வரூபம் பெற்றேன்” என்று மகிழ்கின்றார். 'தூவிசேர் அன்னம் துணையொடு புணரும்’- என்றது பெருமாளும் பிராட்டியும் பிரியாது வாழும் 12. திருக்குறுந். 14. 13. பெரி.திரு.7.6; 9. 14. மேலது 1.1 : 2.