பக்கம்:சோழர் கால அரசியல் தலைவர்கள்.pdf/111

இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

109

காமக்கோட்டம் (அம்மையார் திருக்கோயிலைக்) கட்டுவித்துப் பெருவிபவம் கண்டான் : அம்மையார்க்கு நிறைய அணிகலன்களை அளித்தான் :-

மாசயிலத் தம்மைக்கு வாழதிகை வீரட்டத்
தீச னிடமருங்கி லேந்திழைக்கு—மாசில்
முடிமுதலா முற்றணிகள் சாத்தினான் வேளாண்
குடிமுதலான் தொண்டையர் கோன்.

நடராசப் பெருமான் எழுந்தருளத் திருக்கோயிலைக் கட்டச் செய்தான்; ”நீடும் அதிகையான் நித்தல் பெருங் கூத்தை, ஆடும் அரங்கமைத்தான் ... ... தொண்டையாரேறு” என்றமை காண்க.

இனித் திருவதிகைதான் திருநாவுக்கரசர் சூலை நீங்கித் திருநாவுக்கரசு என்னும் நாமத்தை மன்னிய தலமாகும். இத்தலத்தில் திருநாவுக்கரசருக்குத் திருக்கோயில் கட்டப் பெற்றது:

”ஈசன் அதிகையில்வா கீசன் எழுந்தருள
மாசில் பெருங்கோயில் வந்தமைத்தான்”

என்பது திருவதிகைச் சாசனக் கவியாகும்.

உமாதேவியார் காஞ்சிபுரத்தில் எண்ணான்கு பேரறங்களையும் செய்தருள்கிறார் என்பது சைவரறிந்த உண்மை. இதனைச் சேக்கிழார் சுவாமிகள்,

”நண்ணும் மன்னுயிர் யாவையும் பல்க
நாடு காதலின் நீடிய வாழ்க்கைப்
புண்ணியத்திருக் காமக்கோட்டத்துப்
பொலிய முப்பதோ டிரண்டறம் புரக்கும்”