பக்கம்:சோழர் கால அரசியல் தலைவர்கள்.pdf/139

இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

137

முடிப்புரை

இதுகாறும் கூறியவாற்றான் இக்கங்கர் மரபினர் சிறந்த சிவபக்தி உடையவர்களாய் இருந்தனர் என்றும், சிறந்த தமிழ்ப்பற்று வாய்ந்தவர்களாய் விளங்கினர் என்றும் தெரியவருகிறது.

"முன்னுரல் ஒழியப் பின்னூல் பலவினுள்
எந்நூ லாரும் நன்னூ லாருக்(கு)
இணையோ என்னும் துணிவே மன்னுக"

என்று இலக்கணக் கொத்து ஆசிரியர் போற்றும் பெருமை வாய்ந்த நன்னூலை இயற்றுவித்த அருங்கலை விநோதனாகிய சீயகங்கனைப் போற்றும் முறையில் நன்னூலைக் கசடறக் கற்று, "மொழித்திறத்தின் முட்டறுத்து, முதனூற் பொருளுணர்ந்து" தமிழ் மாணாக்கர் விளங்குவாராக.