பக்கம்:சோழர் கால அரசியல் தலைவர்கள்.pdf/50

இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

48

இவன் மகனோ நாடோறும் பதினைந்து பிராமணர்களுக்கு அன்னம் பாலிக்க நிலதானம் செய்தான்.[1]

அய்யன் மஹா சாஸ்தா

அய்யனார் அல்லது மாசாத்தனார் என்பார் ஹரிஹர புத்திரர் என்றும் கூறப் பெறுவர். இவர்க்கு உத்தர மேருச் சதுர்வேதிமங்கலத்தில்[2] ஒரு கோயில் இருந்தது. இக் கோயிலுக்குப் பார்த்திவேந்திரனது 3-ஆவது ஆட்சி யாண்டில் நிலம் அளிக்கப்பெற்றது.[3] எம்மூர்த் தெற்கில் அய்யன் மஹா சாஸ்தாவுக்குத் திருச்சென்னடைக்கும், நுந்தாவிளக்குக்கும், ஸ்ரீ பலிக்கும், அர்ச்சனா போகத்துக்கும் வைத்த பூமி என்பது கல்லெழுத்து வாசகம்.

(திருச்சென்னடை - நாடோறும் இடையீன்றி நடத்தப்பெறவேண்டிய நித்திய பூசை முதலியன ; நுந்தா விளக்கு - இடையறாது எரியும் விளக்கு ; அர்ச்சனா போகம் - அர்ச்சனைக்காக ஒதுக்கப்பெறும் நிலவருமானம்.)

ஜேஷ்டை

ஜேஷ்டை அல்லது சேட்டையார் திருமகளின்

தமக்கை என்பர். சேட்டையார்க்குக் கோயில் இருந்ததென உத்திரமேரூர்க் கல்லெழுத்து இயம்புகிறது.[4]


  1. 324 Of 19O6.
  2. சதுர்வேதிமங்கலம் - வேதம் வல்ல அந்தணர்கள் வாழுமிடம் ; சதுப்பேதி மங்கலம், சருப்பேதிமங்கலம் எனவும் கல்லெழுத்தில் காணப்பெறும்.
  3. S. I. I. III 1 6 7; 1 5 of 1898
  4. 23 Of 1898 ; S. I. I. III 169.