246
சோழர் வரலாறு
துத்தன், குண்டமையன், இளவரசர் சிலர், சாளுக்கிய ஆகவமல்லன் முதலியோர் போர்க்களம் விட்டு ஓடினர். பகைவருடைய யானைகள், குதிரைகள், ஒட்டகங்கள் பன்றிக்கொடி, விலைமதிப்பற்ற சத்திய விவை, சாங்கப்பை முதலிய அரச மாதேவியர், உயர்குலப் பெண்மணிகள்[1], பிற பொருள்கள் எல்லாம் இராசேந்திர சோழன் கைக் கொண்டான். உடனே இராசேந்திரன் அதுகாறும் எவரும் செய்யாத ஒன்றைச் செய்தான். அஃதாவது, பகைவர் அம்புகளால் உண்டான புண்கள் உடம்பில் இருந்த அப்பொழுதே போர்க்களத்தில் சோழப் பேரரசனாக முடிசூடிக் கொண்டான்[2]. பின்னர் இராசேந்திரன் கோல்ஹாப்பூர் சென்று, அங்கே வெற்றித்துாண் ஒன்றை நாட்டிக் கங்கை கொண்ட சோழபுரம் மீண்டான்.[3]
இராசாதிராசன் யானைமேல் இருந்தபோது இறந்ததால், ‘யானைமேல் துஞ்சிய தேவர்’ எனப் பெயர் பெற்றான்; இங்ஙனமே தன் பின்னோர் கல்வெட்டுகளிற் குறிப்பிடப்பட்டான்.
குடும்பம் : இராசாதிராசன் பூர்வ பல்குனியிற் பிறந்தவன்[4]. இவன் கங்கைகொண்ட சோழபுரத்திலிருந்து அரசாண்டான். இவன் மனைவியருள் பிராட்டியார் எனப்பட்ட திரைலோக்கியமுடையார் ஒருவர். மற்றவர் பெயர்கள் தெரியவில்லை. இவன் தன் சிற்றப்பன், தம்பியர், மக்கள் இவர்களை அரசியல் அலுவலாளராக வைத்திருந்தான் என்று இவனது மெய்ப்புகழ் கூறுகிறது.