டாக்டர். மா. இராசமாணிக்கனார்
287
பிற்காலத்தில் சோழப் பேரரசையே ஆட்டங்கொள்ளச் செய்த கோப் பெருஞ்சிங்கன் ஆவன்[1].
3. நடு நாடு அல்லது மகதை நாடு என்பதைப் பார்வையிட்டு வந்த தலைவன் பாணர் மரபினன். அவன் பெயர் ‘இராசராச மகதை நாடாள்வான்’ என்பது[2]. 4. திருக்கோவலூரைச் சேர்ந்த மலை நாட்டை ஆண்டவன் ‘விக்கிரம சோழச் சேதிராயன்’ என்பவன். அவன் மகன் ‘விக்கிரம சோழக் கோவல (கோவலூர்) ராயன்’ என்பவன். மற்றொருவன் கிளியூர் மலையமான் குலோத்துங்க சோழச் சேதியராயன்’ என்பவன்[3]. 5. தகடூர் அதியமான் ஒருவன், 6. நுளம்ப பல்லவர் சிலராவர் - 7. கி.பி. 1147-இல் கங்க மரபினனான சீயகங்கன் காளத்தியில் உள்ள சிவன் கோவிலுக்கு நிபந்தங்கள் விடுத்தனன்[4]. 8. காளத்தியைச் சுற்றியுள்ள பகுதியில் ‘யாதவராயர்’ என்ற மரபரசர் சிற்றரசராக ஆண்டுவந்தனர்[5]. இம்மரபினர் வீர ராசேந்திரன் காலமுதலே சிற்றரசராக இருந்துவந்தவர் ஆவர். 9. வேங்கி நாட்டுச் சிற்றரசருள் ‘மகா மண்டலேசுவரன் பல்லவ தேவ சோடன்’ ஒருவன்[6]. 10. வெலனாண்டுச் சோழர் மற்றொரு கிளையினர். இம்மரபைச்சேர்ந்த அரசரும் அரச மாதேவியாரும் பாபட்லா, திராக்ஷாராமம், காளத்தி இவற்றிலுள்ள சிவன் கோவில்கட்குத் திருப்பணிகள் பல செய்துள்ளனர்[7]. 11. ‘கொலுறு’வை ஆண்ட ‘காடம நாயகன்’ ஒருவன். இவன் கி.பி.142-இல் ஒரு சிற்றுரரை வேதியர்க்குப்பிரமதேயமாக விட்டனன்[8]. இவன், மகாமண்டலிக பீம நாயகன், வேங்கி தேசச் சாளுக்கிய அங்ககாரன் என்ற பட்டங்களையும்