318
சோழர் வரலாறு
மங்கலத்திலும் இருந்துகொண்டு அந்நாட்டை ஆண்ட சிற்றரசர் ஆவர். இவர்கள் சோழப் பேரரசிற்குப் பெருந்துணை புரிந்தவர்கள். இவருள், குலோத்துங்கன் காலத்தவர் - ‘ஆளப் பிறந்தான் வீரசேகரன்’ ‘வாள்நிலை கண்டான் இராசராசக் காடவராயர்’ என்போராவர். அடுத்த சோழ அரசன் காலத்தில் சோழப் பேரரசை நிலை கலங்க வைத்த கோப்பெருஞ் சிங்கன் இம்மரபரசனே ஆவன். இவன் அழகிய பல்லவன் மகனாவன்[1].
வாணகோவரையார் : இவர்கள் மகாபலிமரபினர். இவர்கள் மாவலிராயர்’ என்றும் ‘பாண அரசர்’ என்றும் கூறப்பட்டனர். இவர்கள் சங்ககாலச் சோழர் காலம் முதல் பிற்காலச் சோழர் காலம் முடியப் பாணராட்டிரத்தை ஆண்ட சிற்றசரர் ஆவர். இவர்கள் பல்லவர் காலத்திலும் இருந்தனர். இம்மரபினர் நடுநாடான மகதை மண்டலத்தை ஆண்டனர்.இவர் தலைநகரம் ‘ஆரை’ எனப்படும் ஆரகழுர் (சேலம் கோட்டத்தில் உள்ளது) ஆகும். குலோத்துங்கன் காலத்தில் இம்மரபினர் இருவர் இருந்தனர். அவருள் ஒருவன் ‘ஏகவாசகன் குலோத்துங்க சோழ வாண கோ அரசன்’ என்பவன். இவன் கல்வெட்டுகள் சேலம், திருச்சிராப்பள்ளி, தஞ்சைக் கோட்டங்களில் அமைந்துள்ளன[2]. மற்றொரு தலைவன் ‘பொன்பரப்பினான் வாணகோவரையன்’ என்பவன். இவனைப் பற்றிய பாடல்கள் பல திருவண்ணாமலை முதலிய இடங்களில் உள்ள கோவில் கல்வெட்டுகளில் இருக்கின்றன[3]. அப்பாடல்கள் சிறந்த தமிழ்ப் புலவர் பாடியனவாகக் காண்கின்றன. எனவே, இச்சிற்றரசன், நல்ல தமிழ்ப் புலவர்களைப் பாராட்டி ஊக்கி வந்தான் என்பது தெளிவாகிறதன்றோ? இவன் திருவண்ணாமலைக்