0 அனுபந்தம் II. புக்கவிலங் கேசுர னாகிய விக்கிரம பாண்டியன் பருமணி மகுடமும் காண்டகு தன்ன தாகிய கன்னகுச் சியினு மார்கலி யீழஞ் சீரிதென் றெண்ணி உளங்கொள்தன் னாடுதன் னுறவோடும் புகுந்து விளங்குமுடி கவித்த வீரசலா மேகன் போர்க்களத்" தஞ்சிதன் கார்க்களி றிழந்து கவ்வையுற் றோடக் காதலி யொடுந்தன் றவ்வையைப் பிடித்துத் தாயைமூக் கரிய ஆங்கவ மானம் நீங்குதற் காக மீட்டும் வந்து வாட்டொழில் புரிந்து வெங்களத் துலர்ந்தவச் சிங்களத் தரசன் பொன்னணி முடியுங் கன்னான் வழிவந் துரைகொ ளீழத் தாசனா கியசீர் வல்லவ மதன ராஜன் மெல்லொளித் தடமணி முடியுங் கொண்டு வடபுலத் திருகாலாவதும் பொருபடை நடாத்திக் கண்டர் தினகரன் நாரணன் கணவ வண்டலர் தெரியல் மதுசூ தனனென் றெனைப்பல" வரையரை முனைவயிற் றுரத்தி வம்பலர் தருபொழிற் கம்பிலி நகருள் சளுக்கியர் மாளிகை தகர்ப்பித் திளக்கமில் வில்லவர் மீனவர் வேள்குலர் சளுக்கியர் வல்லவர் கௌசலர் வங்கணர் கொங்கணர் சிந்துரர் ஐயணர் சிங்களர் பங்களர் ஆந்திரர் முதலிய வரைசரீடு திறைகளு மாறிலொன் றவனியுள் கூறுகொள் பொருள்களு முகந்துநான் மறையவர் முகந்துகொளக்2' கொடுத்து வியாலோ கத்து விளங்கமனு நெறிநின் (20) பொருகளத் (21) மீண்டும் (23) வேழகுலர் (22) றேனைப்பல (24) குடுத்து
பக்கம்:சோழவமிச சரித்திரச் சுருக்கம்.djvu/104
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை
![](http://upload.wikimedia.org/wikipedia/commons/thumb/2/2a/%E0%AE%9A%E0%AF%8B%E0%AE%B4%E0%AE%B5%E0%AE%AE%E0%AE%BF%E0%AE%9A_%E0%AE%9A%E0%AE%B0%E0%AE%BF%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B0%E0%AE%9A%E0%AF%8D_%E0%AE%9A%E0%AF%81%E0%AE%B0%E0%AF%81%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%AE%E0%AF%8D.djvu/page104-901px-%E0%AE%9A%E0%AF%8B%E0%AE%B4%E0%AE%B5%E0%AE%AE%E0%AE%BF%E0%AE%9A_%E0%AE%9A%E0%AE%B0%E0%AE%BF%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B0%E0%AE%9A%E0%AF%8D_%E0%AE%9A%E0%AF%81%E0%AE%B0%E0%AF%81%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%AE%E0%AF%8D.djvu.jpg)