பக்கம்:சோழவமிச சரித்திரச் சுருக்கம்.djvu/16

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

________________

சோழவமிசசரித்திரச்சுருக்கம். ளெல்லாரும் உதவிபுரிந்தார்கள். நந்திபுரடென்னுமிடத்திருந்த நந்தி வர்மபல்லவமல்லனை முற்றினார்கள். அப்பொழுது இவனுடைய தண் டத்தலைவனான உதயசந்திரனென்பவன் திரமிளவரசர்களைத் துரத்திப், பல்லவமல்லனை விடுவித்தான்.* மேற்கூறியவற்றால், கி.பி. 750-ல் தமிழ்நாட்டரசர்கள் பல்லவசார்வ பௌமத்தை ஒழிக்க முயன் மூர்கான்பது விளங்கும். இது முதல், சோழபாண்டியர்கள் தருணம்பார்த்துச் சுவாதீனமடைய எத்தனித்துக் கொண்டிருந்தார்கள். அதற்குச் சாதகமாகத் தம்முட்பெண்களைக் கொடுக் கல்வாங்கல் செய்யத்தலைப்பட்டார்கள். கி. பி. $62-ல் பட்டந்தரித்த வரகுணபாண்டியன் தாய் மருசோழன் மகள். இவ்வாறு தம்முள் ஐக்கியமாயிருந்து கி. பி. 9-ம் நூற்றண்டின் கடைசியில் பட்டஞ்சூட்ட டப்பெற்ற நிருபதுங்கவர்மன என்னும் பல்லவனையும், அவனுக்குத் துணைபுரியவந்த - அவன் கீழ்ச் சிற்றாசனான- பிரதிவிபதி (1) என்ப வனையும் பல யுத்தங்களில் ஜயித்தார்கள். * அக்காலத்தரசாண்டவர் கள் விஜயாலயன் மகன் ஆதித்தசோழனூர், பாண்டியன் மாறஞ்சடை யனும், வரகுணபாண்டியனுமே. இவர்களில் ஆதித்தன், திருபதுங்கனை ஜபித்துச் சோழநாட்டின் -ரு பகுதியைப் பற்றிக்கொண்டான். திருப்புறம்பியத்தில் நடந்த போரில் வரகுணன் பிரதிவிபதியைக்கொன் றான். இவ்வாறு ஆரம்பித்துப் பல்லவசார்வபௌமத்தைத் தொலைத் தனர், இது முதல் சோழர்கள் பரம்பரை ராமா | '-ஆவது நூற் றாண்டுவரை உந்நத நிலையிலிருந்து வந்தது.

  • Udayendram plates of Nandivarman. S. 1. 1, Vol. II. 1.363.) tEligraphist's Sumual li: jpori Tor 1J):) -- 0. I'. 71.

'சோம சூரியாந்வயதுவய குல திலகாலங்காரரான பாண்டியாத ராஜர் வரகுணதேவர் என்னும் திருச்சிராப்பள்ளியிலுள்ள சாபனத்தின் பகுதியால் உணர்க.

  • Cdavendrum plutes of Nandivurinun lulliuvil Mallu I'. 364. நிம்பவனம், சூதவனம், சங்காகிராமம், நெல்லூர், நெல்வேலி, சூரவழுந்தூர் முதலியவிடங்களில். இப்பெயர்கள் தமிழ்ப்பெயர்களின் வடமொழிப்பெயர்ப்பு.
  • Thiruvalangadu Plates of Rajendracholudeva. En. An. Bey. for 1905-6. P, 67.

Scalayendran Platos of Prithivipati il; $. I. 1, Vol. II. 17-381.