இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை
48
ஆந்திரேய் மலிஷ்கோ உக்ரைன்
(1912-1970)
ஓரிணை நீலக் கால்புதை அரணம்
ஒடுகால், நீலுடை உடுத்தி யாரையும் வருத்தும் குறும்பனும், கொடுமை
இயற்றலில் மகிழ்பவன் தாமும் மாரிமா மழையாய் இணைந்துவந் தேனும் இணைச்சுருள் அவிழ்ப்பர், மீண்டும் வீரிடும் ஆற்றின் நீல்நிறம் வளைத்து மீண்டிடும் ஆழநீர்ச் சுழியில்.
வெளிர்நிற நீலக் குண்டினால் விரிந்து
ஏரியைச் சல்லடை யாக்கும் அளித்திடும் நீல வான்மழைப் பாட்டால்
அடவியும் சிலிர்த்திடும் விழித்தே; களிப்புடன் மென்காற்று என்மன நிலையில்
சிரிப்புடன் கண்ணடித் தேதன் ஒளிர்மனக் காதற் குறிப்புகள் தம்மை
ஊற்றின நீர்மையாய் எமக்கே.
1 20