இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை
87 மிர்ஸோ துர்சூன் ஜாடே தாஜிகிஸ்தான் (19. 1911)
என் செந்நீலக் குதிரை
என்அரும் நெஞ்சே! புகழ்கின்றேன்
இடர்கள் ஏதும் தராதவன்நீ;
செந்நீ லத்துஎழில் அற்புதம்நீ,
சிதையாத் தண்மை வலுவுடையாய்:
இன்பில் சுமையாம் வேலையிலும்
இடறாய்; நிறைவாய்ப் பணிசெய்வாய்.
நன்றாய் ஒய்வு வேண்டியே நீ
நாளும் தொல்லைப் படுவதில்லை.
ஒய்வில், லாமல் உழைக்கின்றாய்
உளைச்சல் மூச்சை விடுவதில்லை.
காலம் உன்றன் தோழனடா,
கனிந்த உறுதி தாளமடா!
வாழ்வின் அரிய புதுமைகளை
எளிதே ஏற்றுக் கொள்கின்றாய்;
சூழ்ந்துன் பங்கில் வருவோர்க்கே
ஏற்றுக் கொள்ளும் தோதுடையாய்.
2 1 7