பக்கம்:சோவியத்துக் கவிஞர் நூற்றுவர்.pdf/259

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

95

கிரிகோரே வியெரு மால்டேவியா

(பி. 1935)

கைகள்

மண்ணில் பிறந்ததும் என்தலை மீதினில்

கற்பனைக் காதையினில் கொண்டு புனைந்திடும் சீர்திகழ் பொன்முடி

ஒன்று கவிந்ததுவே: கண்எனக் காத்தஎன் அன்புறு தாயவள்

மென்தளிர்க் கைஅதுவே! கண் எனக் காத்தஎன் அன்புறு தாயவள்

மென்தளிர்க் கைஅதுவே!

அன்புறு தாயவள் கைகளின் மென்மையும்

ஆளும் இனிமையும்போல் இன்புறு காதலி ஈர்த்தெனைக் கொண்டனள்

என்னுயிர் ஏமுறவே. தென்புறும் அன்னவர் தேனிகர் கைகள்என்

நெற்றியில் தென்றலடா! தென்புறும் அன்னவர் தேனிகர் கைகள் என்

நெற்றியில் தென்றலடா!

2.35