மயக்குறு மக்கள் எனக்குளர் ஆயினும்
இன்னும் இரவினிலே, அயர்ப்புறு தொல்லையால் தூக்கம்இல் லாமல் நான்
நொந்து கிடக்கையிலே, வியப்புறும் அன்னையின் கைஎனை மெல்ல
வருடுதல் போல் உணர்வேன். வியப்புறும் அன்னையின் கைஎனை மெல்ல
வருடுதல் போல் உணர்வேன்.
புதுமலர் மென்மையை வென்றிடும் தாய்அவள்
கைகாள் வாழ்த்துகிறேன். இளங்கிளை போன்ற நீர் ஆண்டுகள் சென்றிட
வற்றித் தளர்வடைந்தீர். முதுமைநீர் எய்தினும் உங்கள் வருடுதல்
போல்இன்பம் பொழிபஎவை? முதுமைநீர் எய்தினும் உங்கள் வருடுதல்
போல்இன்பம் பொழிபஎவை?
கணையாழி
அன்புக் குரியளன் காதலியின்-கணை
. ஆழி அதனைமால் டேவியத்தின் வண்புல் வெளியினில் விட்டெறிந்தேன்-பின் மலைகள் கடந்ததைத் தேடிச்சென்றேன். இன்றெனது ஓட்டத் திறமையெலாம்-அட
இவ்வழியில் கற்றுக் கொண்டதுதான்!
அன்பு கெழுமிய காதலியின்-கணை ஆழியி னைப்பெரும் ஆழ்கடலில்
பின்பு நழுவிட விட்டெறிந்தேன்-கொடும்
பேரலைக்குள் மூழ்கிக் கண்டெடுத்தேன்.
இன்றுஎன்றன் நீச்சல் திறமையெலாம்-அட
இவ்வழியில் கற்றுக் கொண்டதுதான்!
236