இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை
அறையின் அடியில் அடக்கி மடக்கி
ஒடுக்கி வைத்திடினும்
அதனின் நல்ல தீய எழுச்சி
உணர்ச்சிப் பாங்கெல்லாம்
முறையின் அனைத்து வரம்பை உடைத்துக்
கிளர்ந்து புரட்சியினை
மூட்டும், பொங்கும் வெறிச்சீற் றத்தில்
முனைந்து வீறிடுமே.
ஊசியின் சிறிய காதில் ஒட்டகம்
தன்னை துழைத்தல் தான்
ஒப்பில் இனிய இசைத்தேன் உயர்வின்
ஓங்கல் ஊற்றாகும்.
வீசித் துள்ளித் திரிந்து யாவும்
பேய்போல் விடுபட்டே
வேட்கும் புலன்கள் உவகைக் களிப்பில்
மூழ்கப் பிணித்திடுமே.
கொழிக்கும் களிவெறிக் கூத்தில் நெகிழ்ந்து
நாமும் பங்குறவே
குருட்டுத் தனமாய் எண்ணிப் பாராது
அழைக்கும் இசைநமையே.
ஒழிப்பீர் உலகியல் கட்டுப் பாட்டை
உரிமை பெறுகென்றே
உணரும் கவலை சிந்தனை அற்றஇப்
பேய்கள் நமைஅழைக்கும்.
நூற்றாண் டுகளாய் இசையின் தந்திர
நுண்மை அழைப்புக்கள் மாந்தர் நெஞ்சைத் தாமறி யாமலே
ஈர்த்து நுகர்ந்தேற்கும்.
2.39