பக்கம்:சோவியத் நாட்டுக் கவிதைகள்.pdf/111

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

மேவாமல் தாவாமல் சாந்தியெனும் மேல்காற்றின் வீச்சினிலே திசை.பரந்து விரட்டுண்டு கலையட்டும்! ஆனந்தத் தீம்பாட்டும் இன்னிசையும் ஆர்க்கட்டும்! அகிலத்தின் மானிடர்கள் அனைவருக்கும் வெற்றிவிழா ஆனதொரு நாளின்றே அகண்ட நெடும் வானத்தின் ஆசாரத் திருவாசல் அகலத் திறந்ததுகாண் சேனாச முத்திரம்போல் செல்லும் சரித்திரத்தின் சீரடி.யின் ஓசையிலே திசைகள்ள தி ரொலித்ததுகாண்? வீரன் ககாரினைப்போல், விசுவாச நட்பாளன் வெற்றித் திருவாளன் தித்தோவும் வென்றதுபோல், தீரன் போப்போவிச், நிக்கோலேவ் இருபேரும் தேசத்தின் பெருமிதமாய்ப் புகழ்வீசித் திகழ்கின்றார்! மரணத்தை ஆபத்தைத் திரணமென மதித்திட்ட மாவீர இரட்டையரே! மா நிலத்தின் மகத்தான தருணமிதில் உங்களுக்கே தாரணிவாழ் !மாந்தரெலாம் தம்மினிய அன்பினையும் டபாராட்டும் தருகின்றார்! '