பக்கம்:சோவியத் நாட்டுக் கவிதைகள்.pdf/17

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

உன்னதமாய்ச் சபைகூடி, ஒருமித்துத் திட்டமிட : அன்னவர்கள் செல்கின்றார்! அருமைjள்ள மந்திரிகாள் ! ~~ஒரு வார்த்தை ! ' இனிதமர்ந்து பேசுங்கள்; எனினும் என் மாஸ்கோவின் நனிசிறக்கும் சோவியத்தில் அணைந்தடைந்து போகாதீர்! ஆமாம்- ஒரு வார்த்தை ! இன்னும் பார் !............ : இடையில் கைத் துப்பாக்கி ஏந்தி நடைபோடுகின்ற 4. படைவீரர் தலைவரைப் பார் ! பார்த்தாயா ? அதோ அங்கு சிரிப்பின் களி விளங்க, செம்மை ஒளி துலங்க, - தெரியும் முகங்களைப் ஃபார் : தெரிகிறதா? அதுதான் என் அருமைத் திருநாட்டின் அஞ்சாத செஞ்சேனை !.... என்னை, என்னுடைய எழிற்செல்வத் திருக்குவையை முன்னின்று காத்தருளும் முன்னணி அப் பட்டாளம்! சத்தத்தைக் கேட்டாயா ? சரிதான்! என் ராணுவத்தின் உத்தரவு ஒலிக்கிறது! உடனந்தப் பட்டாளம் - வைத்த அடி. வழுவாமல் வலம்நோக்கிச் செல்கிறது ! அத்தோடு நானும் உடன் அடியெடுத்து வைக்கின்றேன் ! இஃதெல்லாம் - மெத்த மிக அருமை ! வெகு அருமை ! வெகு அருமை! பட்டுத் துகில் நீலப் படுதா விரித்தாற்போல் எட்டி நிற்கும் 6வானவெளி என் தலைமேல் காட்சி தரும் கட்டழகு ! ஆம். வாழ்ந்த காலமெல்லாம் இன்றைப்போல் களிப்பினை நான் . . . .: : ' .- . கண்ட தில்லை ! வானவெளி வீதியிலே வழுக்கி விரைந்தோடிக் கானம் இசைத்தலையும் க்கனத்து வாகனங்கள் ! ஆகாய விமானங்கள்: ஆம். அவையும் என்னதுதான்! 15