பக்கம்:சோவியத் நாட்டுக் கவிதைகள்.pdf/20

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

அழகிதுதான் ! என்னுடைய அரிய புதுக் குடியரசு வளர்ந்தோங்கிச் செழிக்குமிந்த வளமை மிக அருமை ! வேறுபட்ட நாடுகளோ --? வெறுப்பால் முதுமையினால் வீறுகெட்டு வாழ்வதனால் வெட்டியதோர் சவக்குழியாய் அந்நாட்டின் சரித்திரமும் அழிந்துவரும் !... எந் நாடோ -? இளமை கொழித்துலவி ஏனையபல் நாடுகளின் வளமுறைக்கு மாறுபட்ட வழியில், துணிவோடு கட்டுத் தளையறுத்த கற்பனை_Jால் சிருஷ்டிகளைக் கொட்டி குவித்து வரும்! கோபுரம்போல் நின்றோங்கும்! ஆமாமாம்! ஆனந்தத் திருவெள்ளம் அணைகடந்து பாய்கிறது! ஏனப்பா?-- உனக்கும் இதில் இருமடக்குத் தரலாமா? அற்புதமும் அழகியலும் அமைந்திருக்கும் இவ்வாழ்க்கை அற்புதமே! மிக அருமை! அருமையிலும் வெகு அருமை! இனி நாமே-- , . ' என்றென்றும் மாறாத இளமை நலத்தோடும் ' குன்றாத புகழோடும் கொடிகட்டி வாழ்ந்திடுவோம்!.. ஆண்டாண்டு தோறும் நம் ஆற்றலெலாம் மிகுந்தோங்க நீண்ட நெடுங்காலம் நிலை பெற்று வாழ்ந்திடுவோம்! சுத்தியலின் இன்னிசையை, சொற் கவிதை வாசகத்தை, புத்திளமைத் திருநாடே! போற்றிப் புகழ்ந்திடுவாய்!