பக்கம்:சோவியத் நாட்டுக் கவிதைகள்.pdf/47

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

ஆபத்தைத் தவிர்த்துனக் கபயம் அருளவும்
எழுச்சிபெற் றடியனேன் எழுகுவேன்! நினக்கொரு
இன்னலும் நேர்ந்திடா தென்றும் காக்குவேன் !
என்றுமே சோம்பி இருந்திடா மனிதனின்
இதயநம் பிக்கையும், வாழ்க்கையும், இப்புவி
மன்றிலே அவன்செயும் மாபெரும் படையலும்
மாண்புடன் வாழிய! மாநில மே!உனை
இன்றுயான் வேண்டுவ தொன்றே ஒன்றுதான்:
என்புவி வாழ்க்கையை நீளுற இயற்றுவாய்!

 

45