பக்கம்:சோவியத் நாட்டுக் கவிதைகள்.pdf/52

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

நிலவிவந்த பிணைப்பதனை நிலைகுலைக்கும் புன்மையெலாம் குலைகிறது! நாடனைத்தும் கூட்டுறவு பூண்டொழுகி உலகினிலே சாந்திதனை, உயர்வளிக்கும் நல்வாழ்வை நிலை நிறுத்தும் முயற்சியிலே நெருக்கமுறச் சேர்கிறது ! நாம்விளைத்த நற்பயிரை, நாம்விளைத்த நறுங்கனியை, நாம்முடித்த சாதனையை!' ; நாமடைந்த போதனையை, நாம் படைத்த நற்றெழிலை, நமக்குரித்தாய் ஆனவற்றை நாம் பகிர்ந்து நமதண்டை நாட்டினர்க்கும் நாம்வழங்கி மகமகிழ்வு கொண்டினிதே வளர்ந்தோங்கி வாழ்ந்திடுவோம் ! 50.