பக்கம்:சோவியத் நாட்டுக் கவிதைகள்.pdf/62

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

என்னருமைத் தாய்நாட்டை என்னுளத்தே நான்போற்றி
எந்நாளும் நேசித்தால், என்னிதயம் தன்னிலதை
என்றென்றும் உயிர்வாழ்ந்து இருந்துவர யான்செய்தால்,
பின்னரென்றன் நாட்டினர் தம் பேரிதயம் அனைத்தையுமே
பிடித்துலுக்கி, அன்னவரை என்றென்றும் பிணைத்தணைத்துத்
தன்னடிமை யாக்காவோ என்னருமைப் பாடலெலாம்?

 
 

60