பக்கம்:சோவியத் நாட்டுக் கவிதைகள்.pdf/64

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

பின்னல்மிகு பட்டுடையும் அவளெழிலைப் பெருக்கவிலை! பிரத்யேக மானதொரு பெருமையவள் கொண்டிருந்தாள். என்னவெனில் அவள் இடையில் இருக்குமொரு பிஸ்தோலே, எழில்பெருக்கும் சாதனமாய் அவளிடத்தில் இருந்ததுகாண்! எண்ணம், மனவுறுதி, இசைந்தவொரு பேரமைதி எல்லாம் நிறைந்தவளாய், இரு கண்ணும் கூரியதாய், பெண்ணவளும் கழுகெனவே பெருமிதத்தோ ப டங்குவந்தாள். பெண்ணவளே புரட்சிப்பெண்! க்யூபாவின் பேரழகுப் பெற்றிமிகும் எழிலரசிப் பெண்க ளும் அவளேதான்!