பக்கம்:சோவியத் நாட்டுக் கவிதைகள்.pdf/89

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

இனிமையொடு நீர் கண்டு இன்புற்ற தென்னேயோ? அழகோ? சத்தியமோ? அதுவன்றி வேறெதுவோ? கழறுவீர்! என்றெம்மைக் கேட்பதுபோல் கண்டுணர்ந்தோம், இவ்வுணர்வால் திடீரென்று இதயத்துள் வெட்கமது கவ்விப் பிணைப்பதுபோல் கருத்துள்ளே மனச்சாட்சி உறுத்தி வருத்துதல் போல் உணர்ந்திட்டோம்!... " ஒருகணமும் நிற்காமல், ஓருணர்வும் இல்லாமல் ஒரு நினைப்பும் தோன்றாமல் உரைப்பதுவோ இக்கதையைா? இல்லையில்லை! இதுவேறு! இந்திய.!' வின் கதை வேறு!