பக்கம்:சோவியத் மக்களோடு.pdf/89

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

90

மாடிக்குச் சென்ருேம். தானுயர்த்தியின் கதவைத் திறந்து கொண்டு வெளியே வந்ததும், ஒர் அம்மையார், எங்களே வரவேற்க வருவது போல் முன்னே வந்தார்.

மொழிபெயர்ப்பாளர் வ்லாடிமீர் எங்களே அவருக்கு அறிமுகப்படுத்தினர். அவர் எங்களிடம் வேலை வாங்க வந்தார். அந்த அம்மாள் யார் மாஸ்கோ வானெலியின் பிரதிநிதி. அவருடைய பெயரைக் குறித்து வைக்க மறந்து விட்டேன்.

வந்ததும் வராததுமாக உங்களைத் தொந்தரவு செய் வதற்கு மன்னிக்க வேண்டுகிறேன். உங்கள் மூவரையும் பேட்டி கண்டு, உங்கள் கருத்துக்களைப் பதிவு செய்து கொண்டு போக வந்துள்ளேன். இன்று மாலை ஒலிபரப்பி லேயே, உங்கள் கருத்துரைகளைச் சேர்த்துவிட வேண்டு மென்னும் ஆர்வத்தால் இப்படித் தொந்தரவு செய்கிறேன். சோவியத் பயணம் முடிந்த பிறகும் கருத்துரைகளைக் கேட்போம். இப்போது உங்கள் கருத்துக்களைப் பதிய லாமா ?” என்ருர் அந்த அம்மாள்.

'ஆகட்டும். எல்லோரும், சந்தடியில்லாத ஒர் அறைக்குப் போவோம். அங்கே, மூவர் பேச்சுகளேயும் பதிந்து கொள்ளுங்கள்' என்று கூறினேம்.

எனக்கு ஒதுக்கப்பட்ட அறை, அருகில் இருந்தது. அங்கு சென்ருேம்.

வானெலி அம்மாள், பதிவுப் பொறியை (டேப் ரிகார்டரை) மேசையின் மேல் வைத்தார். பதியும் கிலேக்கு அதைக் கொண்டு வந்தார். எங்கள் சோவியத் வருகை பற்றி சுருக்கமாக, ஐந்து நிமிடங்களுக்கு மேற்படாமல், பேசும்படி வேண்டினர். o நான். மு ன் ன ர் இருமுறை அங்காட்டுக்குச் சென்றவன். ஆகவே நான் முதலில் பேச வேண்டு