60
60
ஐந்து கமிட்டிகள் ல்ைலபாய் பட்டேலை தேர்ந்தெடுத்தார்கள். மூன்று கமிட்டிகள் ஜவஹரை தேர்ந்தெடுத்தன.
மகாத்மா என்ன செய்தார், தலைமை தாங்க மறுத்தார். பலரும் வற்புறுத்த, வற்புறுத்த, அவர் தம் பிடிவாதமான மறுப்பு அதிகரித்தது.
போட்டியின்று விலகுமாறு பட்டேலை கூறினார் காந்தியண்ணல், பட்டேலும் இசைந்தார்.
- காங்கிரஸ் தலைவர் ஜவஹரே !’ என்றார் மகாத்மன.
ரன் என்ற காரணமும் கூறினார்.
" வருங்ாலப் போராட்டத்தை நடத்த வேண்டியவர் இந்நாட்டு இளைஞரே. ஆதலின் இளைஞர் . ஒருவர் காங்கிரஸ் தலைவராயிருததலே மிகப் பொருத்தம். தலைமை பீடததில் நான் இருப்பதும் ஜவஹர் இருப்பதும் ஒன்றே. இதுவரை முதியோர் தயங்கி வந்த பொறுப்பை இனி இளையவர் ஏற்பது முறையே. ஜவஹரின் தீரத்துக்கு இணை யேது ? தேசாபிமானத்தில் ஜவஹரை விட சிறந்தவர் எவர்? அவர் சிறிது அவசரக்காரர். அவ்வளவுதான். ஆனால் அவசரப்பட்டுக் காரியத்தை கெடுப்பவர் அல்லர். எனவே அவர் தலைமையில் தேசம் பத்திரமாகவே இருக்கும்.' என்று விளக்கினார்.
ஜவஹர் ராஷ்டிரபதியாகத் தேர்ந்தெடுக்கப்பட்டார். அப்போது அவருக்கு வயது நாற்பது.
女