பக்கம்:சோஷலிஸ்ட் ஜவஹர்.pdf/70

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

64

64

பிரிட்டிஷாரின் இராஜ த ந் தி ரத் ைத நன்கு

உணர்ந்தவர்கள்.

இந்து இராணுவ வீரர்களை ஏவி முஸ்லிம்களைச் சுடுவார்கள். முஸ்லிம் இராணுவ வீரர்களை ஏவி இந்துக்களை சுடச் செய்து, இரு மதத்தினரிடையே வெறுப்பு, பகை, காழ்ப்பு இவைகளை உண்டு பண்ணுவதே அதன் உள் நோக்கம்,

நம் நாட்டு சுதந்திரத்திற்காக தங்கள் உயிர்களை அர்ப்பணித்து, தியாகம் செய்த கார்வாலி ரெஜிமெண்ட் இராணுவ வீரர்கள் வீரம் என்றும் வாழ்க தியாகம் என்றும் நிலைத்திருக்க !

இருபத்திமூன்றாம் அத்தியாயம்

இர்வின் பிரபுவின் திருவிளையாடல்கள்

அவசர சட்டங்களை அள்ளி வீசிக் கொண்டே இருந்தார் லார்டு இர்வின், நான்கு மாதங்களுக்குள் பத்து அவசர சட்டங்கள்.

காங்கிரஸ்காரர்கள் என்ன செய்தார்கள்? அவசர சட்டங்களை வர வர மீறத் தொடங்கினார்கள். போரிலே குதித்தார்கள். பிரிட்டிஷ் அரசாங்கம் மூர்க்கமாக தாக்கியது. குண்டாந்தடியடிகள் கணக்கில்லாமல் விழுந்தன. குதிரைப் போலிசை ஏவி மக்களை மிதிக்கச் செய்தது. துப்பாக்கியால் அனைவரையும் சுட்டது, சுட்டது. சுட்டுக் கொண்டே