பக்கம்:சௌந்தர கோகிலம்-1.pdf/169

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

மோகனாஸ்திரப் பிரயோகம் 15i

புரசைப்பாக்கத்திலிருக்கும் மகா-ா-ா-பூரீ மகா கனம் பொருந்திய பூஞ்சோலையம்மாள் அவர்கள் சமூகத்திற்கு, மைலாப் பூரிலுள்ள கோவிந்தபுரம் ஜெமீந்தாரவர்கள் குமாரி புஷ்பாவதியம் மாள் அநேக நமஸ்காரம், உபயrேமம்.

நான் தங்களுடைய பங்களாவுக்கு வந்திருந்தபோது அங்கே நடந்த சம்பாஷணை முதலிய சகலமான விவரங்களையும் நான் என்னுடைய தமயனாரிடத்தில் தெரிவித்தேன். தங்களுடைய மூத்த பெண்ணையே கட்டிக் கொள்ள வேண்டும் என்று அவர் இதுகாறும் ஒரே பிரவாதமான எண்ணம் கொண்டிருந்தார். ஆனாலும், ஏற்கனவே தாங்கள் ஒருவித முடிவைச் செய்து, அதை மாற்றக்கூடாத நிலைமையில் இருப்பதையே உணர்ந்தபின், இனியும் தாம் அந்த நினைவையே கொண்டிருப்பது பயனற்றது என்றும், அதனால் துன்பமேயன்றி சிறிதும் சுகம் உண்டாகா தென்றும் நினைத்து, அவர் அந்த ஆசையை மாற்றவும் அந்த நினைவை விலக்கவும் முயன்று கொண்டிருக்கிறார்.

நிற்க, தங்களுடைய இளைய குழந்தை என்னுடைய தமய னாரைக் கட்டிக்கொள்ள நிரம்பவும் ஆசைப்படுகிறது என்பதைக் கேட்டு அவர் மிகவும் ஆநந்தபரவசம் அடைந்தார். தாங்களும் அந்தக் குழந்தையை அவருக்குக் கொடுக்க இணங்கியதைக் கேட்டு அவர் கரைகடந்த மகிழ்ச்சியும், பூரிப்பும் அடைந்ததன்றி அதே குழந்தையைக் கட்டிக்கொள்ள அவரும் சம்மதிக்கிறார்.

ஆனால், இதில் இன்னொரு விஷயமும் இருக்கிறது. எங்க ளுடைய தகப்பனார் இப்போது ஒர் அவசர காரியத்தின் நிமித்தம் எங்களுடைய ஜெமீன் சமஸ்தானத்துக்குப் போயிருக்கி றார்கள். அவர்களுக்கு நாங்கள் இந்த விஷயத்தைப் பற்றி தந்தி அனுப்பினோம். அதற்கு மறு தந்தி இப்போதுதான் வந்தது. இதைத் தெரிந்து கொண்டே தங்களுக்குக் கடிதம் எழுத நினைத் தோம். ஆதலால், இந்தக் கடிதத்தை எழுத ஒரு நாள் தாமதமா யிற்று. எங்களுடைய தகப்பனாரும், அந்தக் கலியாணத்துக்கு இணங்கி விட்டார்கள். ஆனால், அவர்கள் நேரில் வந்திருந்து இந்தக் கலியாணத்தை நிரம்பவும் சிறப்பாக நடத்தி வைக்க ஆசைப்படுகிறார்கள். அவர்கள் அடுத்த வாரத்துக்குள் இங்கே வர முற்றிலும் அசெளகரியமாக இருப்பது பற்றி இந்த முகூர்த்தத்தை