பக்கம்:சௌந்தர கோகிலம்-3.pdf/227

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

காணிக்குற்றம் கோடிக் கேடு - பிரயாச்சித்தம் 225

போகவேண்டிய அவ்வளவு முக்கியமான காரியம் அவர்களுக்கும் நமக்கும் என்ன இருக்கிறது?

பூஞ்சோலையம்மாள் : அந்த ஐயா அவர்களுடைய கச்சேரிக்குப் போக வேண்டியிருப்பதால், அவர்களே நேரில் வர முடியாமல் போயிருக்கலாம். அவர்களுடைய சம்சாரத்தைத் தனிமையில் அனுப்பி வைக்கவும் முடியாமல் இருந்திருக்கும். நம்முடைய பங்களாவில் நடந்த விஷயங்கள் சம்பந்தமாக ஏதேர் முக்கியமான சில ரகசியங்களை நேரில் சொல்ல வேண்டு மென்றும், அதற்காக நான் உடனே புறப்பட்டு வரவேண்டு மென்றும் எழுதினார்கள். நான் போக முடியவில்லை. ஏனென் றால், அந்தக் கற்பகவல்லியம்மாளைப் பற்றி எந்தச் சமயத்தில் எவ்விதமான தகவல் கிடைக்குமோவென்றும், அதற்குத் தகுந்தபடி நடந்துகொள்ள அவளுக்குத் தெரியுமோ தெரியாதோ வென்றும் நினைத்து, நான் இங்கே இருந்து கொண்டு அவளை அனுப்பி வைத்தேன். அவள் போய் அந்த ஐயாவுடைய சம்சாரத்தினிடம் பேசி விஷயங்களைத் தெரிந்துகொண்டு வரும்படி அவளை அனுப்பி வைத்தேன். அவ்வளவுதான் சங்கதி. செளந்தரவல்லி : ஒகோ சரிதான். மத்தியானம் நீங்கள் புறப்பட்டுப் போனிர்களே! அவர்களுடைய வீட்டுக்குத்தான் போய் அக்காளைத் தேடினீர்களோ?

பூஞ்சோலையம்மாள் : ஆம். அங்கேதான் போய்ப் பார்த்தேன்.

செளந்தரவல்லி : அம்மாள் மாத்திரம்தான் இருந்தார்களா, ஐயாவும் இருந்தார்களோ?

பூஞ்சோலையம்மாள் : அம்மாள் மாத்திரம் இருந்தார்கள். செளந்தரவல்லி ; அவர்கள் அவசரமாக நமக்குச் சொல்ல எண்ணிய முக்கிய சங்கதி இன்னதென்பதை நீங்கள் அந்த அம்மாளிடம் கேட்டுத் தெரிந்து கொண்டீர்களல்லவா?

பூஞ்சோலையம்மாள் : அதைத் தெரிந்து கொள்ளாமலா வந்திருப்பேன்.

செளந்தரவல்லி : என்ன சங்கதியம்மா அது? செ.கோ.iii-15