பக்கம்:சௌந்தர கோகிலம்-4.pdf/220

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

218 செளந்தர கோகிலம்

தம்முடைய ஆள்களைச் சிப்பாயிகளைப் போல வேஷம் போட்டுக் கொள்ளச் செய்து, அந்தப் பெண்ணிருந்த வண்டியை ஒட்டிக் கொண்டு மைலாப்பூருக்குத் தெற்கில் கொண்டு போய், தாழைக் காட்டில் தனியாக வைத்துக் கொண்டு பலாத்காரம் செய்வதுபோல நடிக்கச் செய்தார். தாம் உடனே போய் அவளு டைய வண்டிக்காரனைக் கண்டு வண்டியையும் பெண்ணையும் காணாதவர் போலத் தவித்து, அவனுடன் தேடிக்கொண்டு தெற்கில் வந்து, மைலாப்பூருக்குப் பிரிந்துபோன கிளை ரஸ்தாவில் ஒர் ஆள் வந்திருந்து தம்மைச் சந்திக்கும்படி செய்து, பெண்ணை யாரோ சிப்பாயிகள் கொண்டு போனதைத் தான் கண்டதாக அவன் சொல்லத் தெரிந்து கொள்பவர் போல வண்டிக்காரனுக்குக் காட்டிக்கொண்டு அவனுடன் தெற்கே போய் மகா சூரர்போல நடித்து வெறுந் துப்பாக்கியைச் சுட்டு, சிப்பாயிகளைத் துரத்திவிட்டவர் போல நடித்து பெண்ணைக் கொணர்ந்து தமது பங்களாவில் வைத்துக்கொண்டு அவளுடைய மூர்ச்சையைத் தெளிவித்து அவளுடன் பேசி, தான் அவளைப் பெரிய அபாயத்திலிருந்து காப்பாற்றியதாகவும், அதனால், அவள் பேரில் தமக்கு ஒர் உரிமை ஏற்பட்டுப்போனது போலவும் காட்டி, தன்னை மணக்கும்படி தம்மாலேன்ற வரையில் சொல்லிப் பார்த்தார். அவள் தன்னுடைய பழைய உறுதியில் மாறுபடவே இல்லை. ஆகவே, இவருக்கு அவள் பேரில் பெருத்த rாத்திரம் உண்டாய்விட்டது. தங்கையைத் தூண்டிவிட்டு அவள் தன் அக்காளை அவமானப்படுத்தி வேறே ஜாகைக்குப் போகும் படியும் அவள் எல்லாச் சொத்துக்களையும் அபகரித்துத் தன்வசம் வைத்துக்கொள்ளும்படியும் செய்துவிட்டதன்றி, இன்றைக்கு ஆறாவது நாள் வெள்ளிக் கிழமையன்று இளைய பெண்ணைத் தாம் கட்டிக் கொள்வதென்று முடிவு செய்திருக்கிறார். இது மாத்திரமல்ல, இவருக்குப் பழக்கமான ஒரு பையன் அஸிஸ் டெண்டு கலெக்டர் வேலையில் இருக்கிறானாம். அவனுக்கு 10 லக்ஷம் ரூபாய்க்கு மேல் சொத்திருக்கிறதாம். அந்தப் பையனுக்கும் புஷ்பாவதியைக் கட்டி வைத்து, அவள் மூலமாய் அவர்களுடைய வீட்டுச் சொத்துக்களையும் தாம் அபகரிக்கலாம் என்ற பேராசை இவருக்கு உண்டாகிவிட்டது. ராஜரத்தின முதலியாருடைய பெண்கள் இருவரும் இரட்டைப் பெண்கள். அவர்கள் ஒரே மாதிரியாக இருப்பார்கள். அவர்களுள் யாரோ ஒருத்தியின்