இப்பக்கத்தில் நுட்ப மேம்பாடு தேவை
6 ❖
லா. ச. ராமாமிருதம்
- "அவளா குடுத்தா! நீ குடுத்தே!”
- "இருந்தா என்ன? பாருடி இந்தப் பாவத்தை என் மாரிலே பாலைத் தேடுது!”
- “சரிதான். என் புருசன் பட்டாளத்திலேருந்து வந்தால்,
"இந்தா சாமி குடுத்துது கொஞ்சுன்னு குடுக்கச் சொல்றியா?”
- “கொடும்பாவி, அதனாலே கொலை பண்ணனுமா?”
- “சரி, என்னா பண்ணப் போறே?”
- “ஓடிப் போயிடுவோம்.”
- “அதுவும் உன்னை நம்பித்தானே!”
- “சரி, வேண்டாம். இந்தக் குளத்தங்கரையிலேயே
விட்டுட்டுப் போயிடுவம். தானா உருண்டு தண்ணியிலே விழுந்தாலும் விழுந்துட்டுப் போவுது. பண்ணின பாவம் பத்தாதுன்னா நம்ம கையினாலே சாகவனும்? இந்த ஒரு தடவை கூட எடுத்துவிட மாட்டியா?”
- "நீ புண்ணியம் தேடற அழகை நீதான் மெச்சிக்கணும்-”
“அடிப்பாவி! ஆடு மாடுங்ககூட உன்னைவிட ஒசத்திடீ!”
- “அது சரி. நான் மனுச ஜன்மந்தானே? இந்த வெட்டிப்
பேச்செல்லாம் பேசி நேரத்தை ஒட்டாதே. விட்டுட்டு வரதுன்னா வா. நான் கண்ணாலேகூடப் பாக்கமாட்டேன். பாத்தாக்கூட ஒட்டிக்கும்-”
- "நீ இப்படிப்பட்டவன்னு எனக்கு அப்பொ தெரியாதுடீ.
தெரிஞ்சா சாகுவாசங்கூட வெச்சுக்கமாட்டேன். உனக்கு எப்பவும் உன்னைப் பத்தின நெனப்புத்தானே?”
- குரல்கள் எட்ட எட்டப் போய்த் துரத்தில் அமுங்கிப்
போயின.