பக்கம்:ஜனனி-சிறுகதைகள்.pdf/16

இப்பக்கத்தில் நுட்ப மேம்பாடு தேவை

6 ❖

லா. ச. ராமாமிருதம்


"அவளா குடுத்தா! நீ குடுத்தே!”
"இருந்தா என்ன? பாருடி இந்தப் பாவத்தை என் மாரிலே பாலைத் தேடுது!”
“சரிதான். என் புருசன் பட்டாளத்திலேருந்து வந்தால்,

"இந்தா சாமி குடுத்துது கொஞ்சுன்னு குடுக்கச் சொல்றியா?”

“கொடும்பாவி, அதனாலே கொலை பண்ணனுமா?”
“சரி, என்னா பண்ணப் போறே?”
“ஓடிப் போயிடுவோம்.”
“அதுவும் உன்னை நம்பித்தானே!”
“சரி, வேண்டாம். இந்தக் குளத்தங்கரையிலேயே

விட்டுட்டுப் போயிடுவம். தானா உருண்டு தண்ணியிலே விழுந்தாலும் விழுந்துட்டுப் போவுது. பண்ணின பாவம் பத்தாதுன்னா நம்ம கையினாலே சாகவனும்? இந்த ஒரு தடவை கூட எடுத்துவிட மாட்டியா?”

"நீ புண்ணியம் தேடற அழகை நீதான் மெச்சிக்கணும்-”

“அடிப்பாவி! ஆடு மாடுங்ககூட உன்னைவிட ஒசத்திடீ!”

“அது சரி. நான் மனுச ஜன்மந்தானே? இந்த வெட்டிப்

பேச்செல்லாம் பேசி நேரத்தை ஒட்டாதே. விட்டுட்டு வரதுன்னா வா. நான் கண்ணாலேகூடப் பாக்கமாட்டேன். பாத்தாக்கூட ஒட்டிக்கும்-”

"நீ இப்படிப்பட்டவன்னு எனக்கு அப்பொ தெரியாதுடீ.

தெரிஞ்சா சாகுவாசங்கூட வெச்சுக்கமாட்டேன். உனக்கு எப்பவும் உன்னைப் பத்தின நெனப்புத்தானே?”

குரல்கள் எட்ட எட்டப் போய்த் துரத்தில் அமுங்கிப்

போயின.