பக்கம்:ஜனனி-சிறுகதைகள்.pdf/23

இப்பக்கத்தில் நுட்ப மேம்பாடு தேவை

ஜனனி & 13 - "இன்னும் ஆரம்பிக்கக்கூட இல்லையே, அதற்குள்ளாகவா? "ஜனனி, இந்த விளையாட்டு போகப் போகப் புரியாது!” “புரிந்துகொள்ள வேண்டுமென்றுதானே வந்திருக்கிறேன்? “சரி, உன் இஷ்டம்! ஆனால் ஆரம்பிக்கையிலேயே உன் விளையாட்டு உன் இஷ்டம் போல் ஆரம்பித்ததோ?” "ஏன்?” "நீ தாய்ப்பாலுக்கு ஆசைப்பட்டாய். கிடைத்ததோ? உன் உயிருக்கே உலை வந்தது. நீ தப்பியது யார் புண்ணியமோ எப்படியும் உன் சக்தியினால் அல்ல!” “என்னைப் பார் கண்ணாட்டி பாருடி விளக்கையே பார்த்துண்டிருக்கையே-” ஜனனி பார்க்கிறாள். "ஜனனி ஜனனி விளையாட்டில் இன்னமும் சிக்கிக்கொள்கிறாய். அந்தப் பார்வையை அவளிடம் ஏன் காட்டினாய்? பார்க்கச் சொன்னால் நேர்ப் பார்வையில்லாது கடைக்கண் நோக்கு ஏன்?-” அம்மாளுக்கு திடீரென வயிற்றைக் குமட்டியது. 'குடுகுடு'வென்று முற்றத்திற்கு ஓடினாள். தொண்டையைத் திரும்பத் திரும்ப மறுக்கிற்று. வாந்தி எடுக்கும் சத்தம் கேட்டு ஐயர் அறையிலிருந்து வெளி வந்தார். “என்ன உடம்பு?” அம்மாளின் சிவப்பு முகத்தில் ரத்தம் குழம்பியது. கண்களில் ஜலம் ததும்பியது. வாந்தி எடுத்த பிரயாசையா, அல்லது வெட்கமா? அம்மாள் பேசவில்லை. குனிந்து கொண்டு நின்றாள்.