பக்கம்:ஜனனி-சிறுகதைகள்.pdf/24

இப்பக்கத்தில் நுட்ப மேம்பாடு தேவை

f4 * லா. ச. ராமாமிருதம் "ஓ!”- ஐயரின் விழிகள் அகல விரிந்தன. அவள் மெளனத்தின் அர்த்தம் பிரம்மாண்டமான அலையாய் அவர் மேல் மோதியது. உடலில் ஒரு சிறு பயங்கூடக் கண்டது. படங்களை அஞ்சலி செய்துகொண்டு அப்படியே நின்றார். "ஈசுவரி! எல்லாம் உன் கிருபா கடாக்ஷம்!” விளக்கில் சுடர் மறுபடி பொறிவிட்டது. “சரி, சரி; உன் கைவரிசையைக் காட்டுகிறாயாக்கும்! செய், செய்.” சுடர் மங்கியது. குழந்தை, முகம் விசித்துக் கைகால்களை உதைத்துக் கொண்டு அழ ஆரம்பித்துவிட்டாள்.

ஐயர் வீடு ரமித்தது. அவள் வந்த இடத்தில் திரு பெருகக் கேட்பானேன்? திரும்பி வராது எனக் கைவிட்ட பொருள்கள், பன்மடங்கு பெருகிக்கொண்டு வந்து சேர்ந்தன. எதிர்பாராத இடங்களிலிருந்து சொத்துக்கள் வந்து செறிந்தன. ஆரம்பத்தில் நஷ்டமென்று கண்டு நம்பிக்கை இழந்த காரியங்களெல்லாம், கடைசியில் பெருத்த லாபத்தைச் சேர்க்கும் வழிகளாய் மாறின. "இந்தப் பொண்ணு எந்தப் பொண்ணோ! ஆனால் நல்ல ராசி இருக்குடி! அது இருக்கிற இடத்தில் பட்ட மரங்கூடப் பச்சையாத் தழைச்சுப் பூத்துக் குலுங்கறது.டீ" 米 岑 :k குழந்தை விளையாடுகிறாள் 4&器 ଈ୪tனிpo ஐயர் மடி உடுத்துக்கொண்டு ஆசாரமாய்ப் பூஜையில் அமர்ந்திருக்கிறார். அவர் மூக்கைப் பிடித்துக்கொண்டு எண்ணும் தெய்வம் அவர் மடிமேலேயே தவழ்வது அவருக்குத் தெரியவில்லை. -