பக்கம்:ஜனனி-சிறுகதைகள்.pdf/30

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

20

❖லா. ச. ராமாமிருதம்


"ஜனனி, அம்மா என்று யாரைக் கூப்பிடு கிறாய்?" ஜனனி பூஜையறையினின்று வெளிப்பட்டாள். அவள் கண்கள் ஒளி வீசின. தன்னுள் தான் மூழ்கி, தன்னை மறந்து கைகளையும் கால்களையும் வீசியாடிக்கொண்டு, மகமாயிப் பாட்டுப் பாட ஆரம்பித்து விட்டாள்:

“தாயி மகமாயி தாயி மகமாயி
நெற்றிதனில் உள்ள முத்தை நேத்திரத்தில் இறக்கம்மா
நேரு மகமாயி நேரு மகமாயி
நேத்திரத்தில் உள்ள முத்தைத் தாடைதனில் இறக்கம்மா
தாயி மகமாயி தாயி மகமாயி
தாடைதனில் உள்ள முத்தைக் கழுத்துதனில் இறக்கம்மா
காளி மகமாயி காளி மகமாயி
கழுத்துதனில் உள்ள முத்தை மார்புதனில் இறக்கம்மா
மாரி மகமாயி மாரி மகமாயி
மார்புதனில் உள்ள முத்தை வயிறுதனில் இறக்கம்மா
வாரி மகமாயி வாரி மகமாயி
வயிறுதனில் உள்ள முத்தைத் தொடைதனிலே இறக்கம்மா
தாயி மகமாயி தாயி மகமாயி
தொடைதனிலேயுள்ள முத்தை முட்டிதனில் இறக்கம்மா
மூது மகமாயி மூது மகமாயி
முட்டிதனில் உள்ள முத்தைக் காலதனில் இறக்கம்மா
காளி மகமாயி காளி மகமாயி
காலதனில் உள்ள முத்தைப் பாதந்தனில் இறக்கம்மா
பாரி மகமாயி பாரி மகமாயி
பாதந்தனில் உள்ள முத்தை நிலத்தினிலே இறக்கம்மா
நித்ய மகமாயி நித்ய மகமாயி”
ஏதோ பிடியினின்று விடுபட்டதுபோல், குழந்தைக்கு உடல்

உதறியது. எல்லோரும் போய்விட்டதென்று நினைத்துக் கொண்டு, ‘குய்யோ முறையோ’ என்று அடித்துக்கொண்டு