பக்கம்:ஜனனி-சிறுகதைகள்.pdf/79

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

புற்று : 69 மேல் பாய்ந்தாள். “இந்தக் குருக்களாத்துப் பையன்தான் கிணத்தடிக்குச் சும்மா வந்திண்டிருந்தான்-” மாமா கண்களில் பொறி பறக்க அவன் பக்கம் திரும்பினார். "அட பயலே! நிஜத்தைச் சொல்லு!” பையன் திகைத்தே போனான். "எனக்கொண்ணும் தெரியாதே-” “அவன் இடுப்பு முண்டை அவிழுங்கள்- எங்கேயாவது மறைச்சு வச்சிருப்பான்-” - “பேசாமெ ரெண்டு புளிய மலாறு கொண்டு வாருங்கள். முற்றத்தில் உலத்தியிருக்கே- வீறுவிறுன்னு வீறினா, பையன் பேசாமெ தோட்டைக் கக்கறான்- பாம்பு மாணிக்கத்தைக் கக்கறமாதிரி-” - இதற்குள் ஒருவர் பிரியமாய், அவனை மடியில் வைத்துக் கொண்டு மிகவும் சாமர்த்தியமாய், “சொல்லுடா கண்ணா, எங்கிட்ட மாத்திரம் சொல்- பெப்பர்மிண்டு வாங்கித் தரேன். எங்கே ஒளிச்சு வச்சிருக்கே? உனக்கு என்னத்துக்கு அது? உனக்கு வேறே சாமான் எல்லாம் வாங்கித் தரேன்-” “எனக்கு ஒண்னுந் தெரியாது- எனக்கு ஒண்ணுந் தெரியாதே-!” முள்ளிலை மாட்டிக்கொண்ட ஆட்டுக் குட்டியின் அபலைக் குரல் மாதிரியிருந்தது அவன் கத்தல். கண்கள் பயத்தால் சுழன்றன. நகையைக் கெட்டுப் போக்கின மாமி, உடம்பெல்லாம் ஆட்டிக்கொண்டு ஆத்திரத்துடன் அவனிடம் வந்தாள். "ஒண்ணுமே தெரியாதாடா உனக்கு- குழந்தைக்கு ஒண்ணு தெரியுமோ! வாயில் விரலை வச்சால் கடிக்கத் தெரியுமோ?” என்று சொல்லிக்கொண்டே, அவன் வாயில் விரலை வைத்தாள். அவ்வளவுதான் பையன் ஆத்திரத்துடன் விரலைக் கடித்துவிட்டான். அவனுள் உறங்கியிருந்த ஏதோ ஒரு உணர்ச்சியை அவள் அனாவசியமாய்த் தட்டியெழுப்பிவிடவே,