பக்கம்:ஜாதி ஒழிப்பும் மொழிப் பிரச்சினையும்.pdf/25

இப்பக்கத்தில் நுட்ப மேம்பாடு தேவை

24

அந்த பார்ப்பனரல்லாதார் கூட்டம் தென்னூரில் கூட்டப்பட்ட

பொழுது, நான் பெரியாரிலிருந்து கருத்து மாறுபட்டுவிட்டேன். அன்று அவரோடு இணைந்து நிற்கவில்லை. அந்தக் கூட்டத்துக்கு வந்திருந்த ஒரு நண்பரைச் சந்திக்கும் பொருட்டு நான் தென்னூருக்குச் சென்றேன். என்னைக் கண்டதும் திருவாளர்கள் : கி. ஆ. பெ. விசுவநாதமும், சௌந்தர பாண்டியனும் என்னைக் கூட்டத்தில் கலந்துகொள்ளும்படி அழைத்தார்கள். ஒரு நண்பரைப் பார்க்க மாத்திரமே வந்தேன் என்றும், எனக்கும் அந்தக் கூட்டத்துக்கும் ஒரு சம்பந்தமும் இல்லையென்றும்கூறி, அவர்களுடைய அழைப்பை மறுத்தேன். அவர்கள் வலுக்கட்டாயப்படுத்தி, என்னை கூட்டத்தின் மத்தியில் அழைத்துச் சென்று உட்காரவைத்தார்கள்.

பலர் பேசினார்கள். பின்னர், மீண்டும் அந்தக் கூட்டத்தில்

எனது கருத்தைத் தெரிவிக்கும்படி வற்புறுத்தினார்கள். " நான் எதிரிடை அபிப்பிராயம் உடையவன். என்னைப் பேசச் சொல்ல வேண்டாம். அதில் லாபமொன்றுமில்லை" என்று அழுத்தமாகக் கூறிப் பார்த்தேன். அவர்கள் விடவில்லை.

நான் பேசினேன். " நான் ஒரு சோஷலிஸ்ட். நான், பிராமணன் பிராமணரல்லாதான் என்பதை ஒப்புக்கொள்ளவில்லை. சுய

மரியாதை இயக்க ஆரம்ப காலத்திலிருந்து, அதோடு நெடுகலும் தொடர்பு கொண்டிருந்தவன் நான். ஆயினும் நீங்கள் பிராமணரல்லாதார் என்று சொல்லுகிற சொல்லை,எந்த அர்த்தத்தோடு கூறுகிறீர்கள் என்று எனக்கு விளங்கவில்லை. பிராமணரல்லாதார் என்றால் அக்கிரகாரத்தில் பிறக்காதவர்கள் என்ற அர்த்தத்தில் நீங்கள் உபயோகப்படுத்தினால் பிராமணரல்லாத காங்கிரஸ்காரர்களாகிய டாக்டர் நாயுடு, திரு. வி. கல்யாணசுந்தரனார் போன்றவர்களை இந்த மகாநாட்டுக்கு நீங்கள் அழைத்தீர்களா? பிராமணியம் அல்லாதார் என்று நீங்கள் கூறினால், 'பிராமணீயம்' என்பதற்கு புரோகித மறுப்பு, ஜாதி எதிர்ப்பு, இந்துமத மூட நம்பிக்கை எதிர்ப்பு என்பவற்றையெல்லாம் அடக்கி, நீங்கள் பொருள்கொண்டால், அப்படிப்பட்ட பிராமணீயத்தை ஒழித்துள்ள காங்கிரஸ் பிரமுகர்களான ராய சொக்கலிங்கம் செட்டியார். சேலம் பவானி சிங், டி. எஸ். சொக்கலிங்கம் போன்றவர்களை இந்த மாநாட்டுக்கு அழைத்தீர்களா? இல்லை. அதேபொழுதில், நாள் தவறாமல் பழனிக்குச் சென்று வேலாயுதத்தையும் சூலாயுதத்தையும் வணங்குவது மட்டுமல்ல, பார்ப்பன புரோகிதனிடம் தீர்த்தமருந்திவரும் பி. டி. ராஜன் போன்றவர்களை இந்த மகாநாட்டுக்கு அழைத்துள்ளீர்கள்.

ஆகவே உங்கள் "பார்ப்பனரல்லாதார் " எல்லாம் காங்கிரஸ்