இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை
நீலக்கடல் அலை 19.
கதவைத் திறவுங்கள்...!” என்றான் கரிகாலன், நாலும் தெரிந்த அமைப்புடன்.
அழகேசன் கதவுகளைத் திறந்தான். ‘ அழகி.அழகி” T ஆதங்கம் பொங்கக் கூவினன். சூன்யம் அவனைப் பைத்தியம் என்று முடிவுகட்டியதுடன் நின்றிருந்தால் தேவலாம்; கைகொட்டி வேறு சிரித்தது. கடிதம் ஒன்று கண்ணில் பட்டது. -
“அழகேசன், துரோகி நீர்!...என்னைக் கூண்டுக் கிளி யாக்கப் பார்க்கும் உம் கனவு பலிக்காது. -
இப்படிக்கு, அழகி.”
கடவுளை அழைத்துக் கொண்டிருந்தார்கள்-சுசீலாவும் கரி காலனும். உயிரைக் கையில் பிடித்துக் கொண்டு நின்றர்கள்-- தம்பியும், தமக்கையும். - -
- அழகி.அழகி.1'-அழகேசன் பேயாக மாறினுன்; மறு கணம் அவன் ஐயோ!” என்று கூக்குரல் எழுப்பினுன்!