பக்கம்:ஜீவாவின் பாடல்கள் தொகுப்பு.pdf/117

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

கடவுள் ஏன் இல்லை? கடவுளில்லை கடவுளில்லை கடவுளென்ப தில்லையே! உடமையுற்ற வாழ்க்கையே மடங்கள் தந்ததாதலால் கடவுளில்லை கடவுளில்லை கடவுளென்ப தில்லையே கடமையற்ற வீணரே களிக்கிறார்க ளாதலால் கடவுளில்லை கடவுளில்லை கடவுளென்ப தில்லையே (கடவு) வெடிமருந்து யுத்தமேகம் வீறுகின்ற தாதலால் கடவுளில்லை கடவுளில்லை கடவுளென்ப தில்லையே கொடுமையோ டடிமையும் குமுறுகின்ற தாதலால் கடவுளில்லை கடவுளில்லை கடவுளென்ப தில்லையே நடவு நட்ட தோழர் கட்சி நாமடைந்து நின்றதால் கடவுளில்லை கடவுளில்லை கடவுளென்ப தில்லையே தினம் உழைப்ப வர்க்கிசைந்த ஜெகம் அவாவி ஜீ8 நின்றதால் கடவுளில்லை கடவுளில்லை கடவுளென்ப தில்லையே அடிமை மக்கள் இழிவினை யகற்றவேண்டி நின்றதால் கடவுளில்லை கடவுளில்லை கடவுளென்ப தில்லையே உடைமைமுற்றும் பொதுவிலாக்கி யோங்குமாறு கடவுளில்லை கடவுளில்லை கடவுளென்ப தில்லையே 113

நின்றதால்

113