பக்கம்:ஜெபமாலை முதலிய 5 சிறுகதைககள்.pdf/30

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

நவம்பர் புரட்சிக்கு முன்பு ரஷிய நாட்டிலே, வேலாயுதங்களே ஆட்சியாளர்கள், லெனின், வேணுவைக் கூப்பிட்டான், முதவாளித்வ முறையின் சூட்சம் சக்தி எது என்பதைக் காட்டினான். அந்த 2 சக்தியை முறியடிக்கும் சம்மட்டியைத் தந்தான், பிறகுதான், நயவஞ்சகத்தால் நாட்டுச் செல்வங்களை உறிஞ்சிக் கிடந்த வேலாயுதங்களுக்கு, வேதனையை அனுபவித்துக்கொண்டிருந்த வேணுக்களின் சக்தி என்ன என்று தெரியவந்தது! இன்று அங்கே, புளுகிப் பிழைக்கும் சீமானும் இல்லை; புளுகியாவது புழு நெளிவதுபோன்ற வாழ்வு நடத்த முடிகிறதா என்று வேலையிலே உழலும் வேணுவும் இல்லை! சக்திக்கேற்ற அளவு பாடுபடுகிறார்கள், தேவைக்கேற்ற அளவு பெறுகிறார்கள். இந்த அமைப்பு முறையின் பயனாகவே ரஷ்யாவிலே,எய்த்துப் பிழைப்பவனும் ஏமாளியும் இல்லை! "என்ன செய்வது அங்கத்தை வளர்க்க ஆயிரம் பொய் பேசியாவது தீரவேண்டியிருக்கிறது!" என்று பேசும் வறுமையாளனும் இல்லை. "ஒரு போடு போட்டேன், அவன் அதை உண்மை என்றே நம்பி விட்டான்; அடித்தது நமக்கு ஆறு ஆயிரம்" என்று பொய் பேசிப்பெற்ற இலாபத்தைப் பூரிப்புடன் பேசிக்கொள்ளும் மாளிகைவாசியும் இல்லை. மக்கள் வாழ்கிறார்கள், ஒருவர் உழைப்பை மற்றொருவர் ஏய்த்துவாழும் நிலையிலே அல்ல மானமும் மதியும், நீதியும் நேர்மையும் செழிக்கும்விதமான நிலையிலே உள்ளனர். பாடுபடுகிறார்கள். பலனை வேறொருவன் பறித்துக்கொள்வானே என்ற பயமின்றி! வேதனை இல்லை, வேலாயுதங்கள் இல்லாத்தால்!



29