பூவை. எஸ். ஆறுமுகம்Δ 111
மூன்று : எழுத்துப் புள்ளிமான் இந்துமதியின் மணல் வீடுகள் !’ - -
இந்த மூன்று கதைகளுக்குமே குழந்தைதான் ஜீவன்.
இந்த ஜீவனுக்கு முதல் ஆதாரம் அளித்தவர் டாக்டர் லக; மி. -
லக்ஷ்மியின் கதையமைப்பில் பின்னர் தடம் ஒற்றி நடந்தது சிவசங்கரி என்னும் பெயர்.
நடுவில் வந்தது மணல் வீடுகள்’.
சமுதாய நீதியையும் சமூக நியதியையும் சீர்குலைக் கும் பச்சை விபச்சாரக் கதைதான் இந்த மணல் வீடுகள்: கதை. ,
க்ருபாகரன்.
புவனா.
சளி.
மூன்று பேரும் முக்கோணப் புள்ளிகள்.
புவனாக்ருபா ஜோடிக்குப் பெயர் சொல்லப் பிள்ளை இல்லை. ஆனாலும், அவர்களுக்குக் குழந்தை தேவைப்படுகிறது!-அந்தப் புண்ணியம் சளி என்கிற பாவிப் பெண்ணுக்குக் கிட்டுகிறது. க்ருபா வாயிலாகச் சளி ஆடிவரும் தேன்’ குழந் தையைப் பெற்றெடுக்கிறாள்.அவளது கடமை யோடு, அவளுடைய கதையும் சந்தி சிரித்த பிறகு, ஒரு முச்சந்தியில் பிரிகிறது :
முரண்பட்ட ஆபாசத்துக்கு, சுஜாதாவைப் போலவே மற்றுமொரு வடிகால் அமைப்பாக விளங்கும் இந்துமதி