பக்கம்:ஜெயகாந்தன் முதல் சிவசங்கரி வரை.pdf/17

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

பூவை. எஸ். ஆறுமுகம் Δ 15




இலக்கியம் படைத்த- படைக்கின்ற மாண்பு மிக்க சகோதர எழுத்தாளர்களுக்கும், பண்பு மிகுந்த எழுத்துச் சகோதரிகளுக்கும் என் நன்றியையும் வாழ்த்தையும் தெரிவித்துக் கொள்ளவேண்டும்.

இந்நிலையிலே, இப்போது என்னுடைய தமிழ்நாவல் இலக்கியத் திறனாய்வுப் பணியின் மூன்றாவது கட்டம் உருப்பெறுகிறது ! திரு ஜெயகாந்தன் ஆரம்பித்து வைக்க, திருமதி சிவசங்கரி முடித்து வைப்பார் !...

தமிழ்ப் படைப்பிலக்கியத்தை நாகரிகமான நேர்மையுடனே பேணிக்காக்கின்ற இலக்கிய ஆர்வலர்கட்கு என் அன்பின் நன்றி உரியது.

சென்னை-600 045 பூவை. எஸ். ஆறுமுகம்
1-12-96