பக்கம்:ஜெயில்.pdf/14

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

கட்டுரைகள் சமூகமும் ஒரளவு பொறுப்புள்ளதே. சமூகம் தன் பொறுப்பை உணராமல் கட்டிக் கழித்துவிட்டு, ஜெயிலை மட்டும் ப்ெரிதாகக் கட்டி, குற்றவாளிகளை உள்ளே அடைத்துவிட்டால் ப ரி கா ர ம் உண்டாகிவிடுமா? ஜெயிலுக்குள் கள்ளப்பட்ட குற்றவாளிகள் சீர்திருந்தி விடுகிரு.ர்களா ? சீர்திருந்தாவிட்டாலும், பழைய நிலைமையி லாவது விடுதலையாகிரு.ர்களா ? அல்லது, ' குற்றவாளிகள்' மறைந்து, பெருங் குற்றவாளிக ளாக வருகிருர்களா? இன்றுள்ள நிலைமையில் ஜெயில் எப்படி யிருக்கிறது ? ஜெயில் வாசிகள் எப்படி யிருக்கின்றனர்? அவர்களை மேய்த்து வரும் அதிகாரிகள் எப்படி யிருக்கிருர்கள்? இவைகளைப் பற்றிப் பொது ஜனங்கள் ஒரளவாவது தெரிந்துகொள்ள வேண்டியது அவசியம். தண்டனை அடைந்தவர்களின் நன்மையும் தின்மையும் சமூகத்தையும் பாதிக்கே திரும். நம்மிடையேயுள்ள ஒரு பெருங் கூட்டத்தினருக்குக் கொடுக்கப்படும் தண்டனையின் த ழும் புக ளே நாம் அவர்களிடம் தேடிப் பார்க்க வேண்டாம் ; நம் உடல்களிலும் உள்ளங்களிலுமே அந்தத் தழும்புகளைக் கண்டுகொள்ளலாம். ஒரு திருடன் ஒரு செல்வனுடைய பொருளைத் திருடுகிருன் என்று வைத்துக் கொள்வோம். செல்வன் இழப்பது வெறும் பொருளைத் தான் ; ஆனல் திருடனே, தன் மனிதத் தன்மையையே இழக்கிருன் என்பதை ஆசிரியர் பெர்னர்ட் ஷா என்ருக விளக்கியிருக்கிரும். எந்த நஷ்டம் பெரியது? இதைப் போலவே, கண்டன அடைந்த தனி மனிதர்கள் பலவிதத் துன்பங்களே அநுபவிப்பார்கள் ; தண்டனை அளித்த சமூகமும் அதன் பலனை அநுபவித்தே தீரும். 8

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:ஜெயில்.pdf/14&oldid=855419" இலிருந்து மீள்விக்கப்பட்டது