பக்கம்:ஜெயில்.pdf/42

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

தீவாக்தாம் பொதுவாக இவர்கள் ஒவ்வொருவரும் அதுபவித் திருக்கும் துன்பத்தை யெல்லாம் தனித்தனி நூலாக எழுதிலுைம் அடங்காது. அப்படியும் சிலர் தம் அந்தமான் வாழ்க்கையைப்பற்றி எழுதியிருக்கிருர்கள். சுருங்கச் சொன்னல், விடுதலையாகி, சுத்த சுதந்தரியாக வி ள ங் கும் பாரத தேவியின் ஜோதிமயமான ஒர் உருவத்தைக் கற்பனைக் கண்ணுல் கண்டு, அந்த ஆனந்த லாஹிரியில் தங்கள் துன்பங்களை மறைத்துக்கொண்டு தான் இவர்கள் வாழ்ந்திருக்க வேண்டும். மிகவும் திட சரீரிகனான கைதிகளும், அந்தமான் சென்றவுடன் வாரந்தோறும் எடை குறைந்து, பற்பல நோய்களுக்கு இரு ப் பி ட ம் ப் விளங்கினர்கள். அந்தமானே மனித வாசத்திற்கு லாயக்கில்லை என்று பலர் பல சமயம் எடுத்துரைத்திருக்கிருர்கள். அத்தகைய தீவில் கொடுமையும், கண்டிப்பும், கடினவேலேயும் உள்ள சிறைச்சாலையில் அடைத்து வைப்பது கிறுத்தப்பட வேண்டும் என்று வெகு நாளாய்க் கிளர்ச்சிகள் நடந்து வந்திருக்கின்றன. ஆனல், மஹாவீர்சிங் முதலியோர் உண்ணு விரதமும், மரணமும், பின்னல் 1937 - ல் அநேக மாக எல்லா ராஜீயக் கைதிகளும் உண்ணு விரதம் ஆரம்பித்ததும் இந் தி யா வி ன் முழு கவனத்தையும் அந்தமான நோக்கி இழுத்தன. இனியாவது இதைப் போன்ற கண்ணற்ற தீவு' க்கு எவ்விதக் கைதியையும் அனுப்பாமல் இருக்க கிரந்தரமான ஏற்பாடு செய்ய வேண்டும். பூலோகத்தில் ஒரு தரகம் உண்டானல் அது இந்தியச் சிறைச்சாலைதான் என்று கர்னல் வெட்ஜ்வுட் 37 l

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:ஜெயில்.pdf/42&oldid=855481" இலிருந்து மீள்விக்கப்பட்டது