1284 ஞானசம்பந்தர் இடியகுர லாலிரியு மடங்கல தொடங்கு முனைச்சாரல் கடியவிடை மேற்கொடியொன் றுடையர் கயிலை மலையாரே. ( 1) என்பது இதன் முதல் பாடல். கயிலைநாதர்மீது இன்னொரு பதிகமும் பாடியுள்ளார், இது வாளவரி கோலபுரி (3:68) என்ற முதற் குறிப்புடையது. இதில், - சென்றுபல வென்றுலவு புன்றலையர் துன்றலொடு மொன்றி யுடனே கின்றமரர் என்றுமிரை வன்றனடி சென்றுபணி கின்ற நகர்தான் துன்றுமலர் பொன்றிகழ்செய் கொன்றைவிரை தென்றலொடு சென்று கமழக் கன்றுபிடி துன்றுகளி றென்றிவைமுன் கின்றகயி லாய மலையே. (7) என்பது ஏழாம் பாடல். - அடுத்து பாடுவது கேதாரம் பற்றி. தொண்டரஞ்சு களிறு (2.114) என்ற முதற் குறிப்புடையது. இதில், கேலா - கர்பியாங் - காலபானி - லிப்பு தடாக்-லி கண வாய்-தக்கள கோட்டை - தீர்த்தா - புரி தீ புரி கயிலை அடிவாரம்-ஆக மொத்தம் அல்மோராவிலிருந்து 297 கல் தொலைவு. 22980 அடி உயரம். பனிக்கட்டியாலாகிய ஒரு து.ாபி போலுள்ளது. கயிலைநாதன் அருளினால்தான் அவன் காட்டக் கண்டு அவன் திருவுருவைச் சேவிக்க வேண்டும். இன்றேல் பனிமலை சிகரம் ஒன்றையே கண்டு திரும்ப வேண்டும். பனிக்கட்டித் தூபியை வலம் வர 29 கல் தொலைவு. மிக்க கடினமான திருத்தலப் பயணம். 21. கேதாரம் (பத்ரிகேதார்) : இதுவும் இமயமலை யிலுள்ள தலம். சென்னை - தில்லி - ரிஷிகேசம் - தேவபிரயாகை - கீர்த்தி நகர் - பூரீநகர் - ருத்ரப்பிர
பக்கம்:ஞானசம்பந்தர்.pdf/325
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை