பக்கம்:ஞான மாலை.pdf/139

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

- பாடும் பணி 121 ஆனல் அவருக்குச் சாப்பாடு போடுகிற தொழில் தாசில் உத்தியோகம், மற்ற மற்ற வேலைகள் இருக் தாலும் எல்லாவற்றையும்விடத் தம்முடைய கடமை யாக எண்ணுவது அந்த உத்தியோகம். அந்த உத்தியோகத்தைச் செய்கின்ற அவருக்கு ஊக் கத்தை உண்டாக்கவும், உடல்நலத்தை உண்டாக்க -வும் மற்றக்காரியங்கள் துணையாக இருக்கின்றன. - அதுபோல முருகனுடைய அங்கங்களைப் பாடு கின்ற பணியையே முக்கியப் பணியாக, கடமையாகக் கொண்டு அந்தக் கடமையைச் செய்வதற்கு உதவி யான காரியங்களேச் செய்யவேண்டும் என்பதே பொருள். உடம்பு பருப்பதற்காக உண்ணுமல் முருகனுடைய அங்கங்களின் பெருமையைப் பாடு வதற்கு ஏற்ற வலிமை பெறுவதற்காக உண்ண வேண்டும். கம்முடைய பொறிகள் சரியான வகையில் அமைவது. பிரபஞ்சத்திலுள்ள பொருள் களின் சுவை நுகர்வதற்காக அன்று. உடம்பாகிய கருவியைக் கொண்டு இறைவழிபாட்டை இடையீடு இல்லாமல் செய்வதற்காகத்தான் க ரு வி.ை 钴j க் கொண்டு வேலை செய்கிறவன் அந்தக் கருவியைத் தீட்டுதல் முதலிய காரியங்களைச் செய்கிருன். அதுபோல உடம்புக்கு வேண்டிய காரியங்களைச் செய்வது அந்தக் கருவியை இறைவன் பணியில் o ஈடுபடுத்துவதற்காகத்தான். பாடும் பணி அருணகிரிநாதப்பெருமான் முதல் பாட்டில் தாம் பாடும் பணியைப் புரியவேண்டும் என்று வேண்டிக்

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:ஞான_மாலை.pdf/139&oldid=855751" இலிருந்து மீள்விக்கப்பட்டது